India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் காலை 5:15 மணிக்கு புறப்படும் ரயில் பகல் ஒரு மணிக்கு பெங்களூருவை சென்றடையும். மறுமார்க்கமாக பெங்களூருவில் பகல் 1:30 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரை சென்றடையும். மேலும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலூரில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலில் மக்கு. பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் அனைவரையும் குறைத்துக்கொண்டு கடிக்க பாய்ந்து வரும் அண்ணாமலை ஏர்வாடி அழைத்துச் செல்லும் நிலையில் உள்ளார் என்றார்.
மதுரை மடீட்சியா வளாகத்தில் நாளை (ஆக.28) தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. மடீட்சியா வர்த்தக தகவல் மையம் மற்றும் சிட்பி வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் இந்த கடன் வழங்கும் முகாமில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன், புதிய தொழில் முனைவோர்களுக்கான கடன், சேவை நிறுவனங்களுக்கான தொழில் கடன், வர்த்தகர்களுக்கான சிறப்புக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கடன்களை பெறலாம்.
தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் மதுரையை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் முரளிதரன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள இருவருக்கும் செப்டர்பர்.5 அன்று விருது வழங்க்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற செப்டம்பர்.30 ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். கடை வரைபடம், கிரைய ஆவணம், ஆகியவற்றுடன் இ-சேவை மையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், செப்டம்பர் 30 ம் தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை – பெங்களூரு இடையேயான கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் நாகர்கோவில் – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இவ்விரு ரயில் சேவையும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆக.30 அன்று தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாஸ்போர்ட் சேவை மையங்களான மதுரை, திருநெல்வேலி மற்றும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களான போடி, கொடை ரோடு, தேவகோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நாகர்கோவில் மையங்களில் ஆக.30 அன்று பாஸ்போர்ட் சேவை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுபவமும் திறமையும் கொண்ட நிரந்தர டீனை தாமதமின்றி நியமிக்க நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் கே.கே வெரோணிக்கா மேரி பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக சுகாதார துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நிதிச் சுமையால் இளநிலை பாடப் பிரிவுகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை ரத்தானதால், கிராமப்புற மாணவா்களின் உயா்கல்வி வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக கல்வியாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு மட்டுமே மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் நான்கு வழிச்சாலையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் கள்ள நோட்டு கும்பல் ஒன்று சிக்கியது. கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், ரூ.26,500 கள்ள நோட்டுக்களுடன் சிக்கிய இந்த கும்பலில் மதுரை பாலமேட்டை சேர்ந்த சுகிர்தராஜ் (24), செல்லூரை சேர்ந்த திவாகர் மனைவி ஜெனிதா என்ற முருகேஸ்வரி (24) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து தப்பிய வில்லாபுரம் கோட்டைசாமியை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.