Madurai

News August 28, 2024

காந்திய அரசியலின் பிறப்பிடமாக விளங்கிய மாமதுரை

image

மகாத்மா காந்தி 1921ல் மதுரைக்கு வந்தபோது அவர் மேலமாசி வீதியில் தங்கியுள்ளார். அப்போது தனது அறையிலிருந்து வெளியில் பார்க்கும்போது பலரும் மேலாடையின்றி இருப்பதைக் கவனித்துள்ளார். அன்றிலிருந்து அவர் அரை ஆடைக்கு மாறினார். அடுத்த நாள் அவர் மதுரையில் முதன்முறையாக உரையாற்றிய இடம் இன்றளவும் காந்தி பொட்டல் என்று அறியப்படுகிறது. காந்தி காலத்திலேயே அரசியலில் மதுரை முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

News August 28, 2024

மதுரையில் 5 ஆண்டுகளில் 500 கோடி கல்விக்கடன்

image

கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 500 கோடி கல்விக்கடன் கொடுத்து சாதனை படைத்த மாவட்டமாக மதுரை மாவட்டம் திகழ்ந்துள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், அந்த சாதனை வரிசையை இந்த ஆண்டும் தொடரும் வகையில் நாளை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாகவும் முகாமில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெற அறிவுறுத்தியுள்ளார்.

News August 28, 2024

மதுரையில் களைகட்டும் புத்தக திருவிழா

image

மதுரை தமுக்கம் மைதானத்திலுள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகின்ற 06.09.2024 முதல் 15.09.2024 வரையில் புத்தகத் திருவிழா-2024 நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். புத்தகத் திருவிழாவில் முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற அறிவுறுத்தியுள்ளார்.

News August 28, 2024

பொன் மாணிக்கவேலுக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு

image

முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கப்பூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா? என்றும், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக ஆவணங்கள் உள்ளதா என்றும் சிபிஐக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி முன் ஜாமீன் கோரிய வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

ஐஜி பொன் மாணிக்கவேல் ஐகோர்ட் கிளையில் மனு

image

கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் சிபிஐ தன்னை கைது செய்யாமல் இருக்க பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று (28.08.2024) விசாரணைக்கு வர உள்ளது.

News August 28, 2024

மதுரை-கொல்லம் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி

image

மதுரை – கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வரும் இந்த நிலையில் நேற்று காலை விருதுநகரிலிருந்து கேரளத்துக்கு மளிகைப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி, வடுகபட்டி அருகே மாற்றுப்பாதையில் திரும்பும் இடத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநா் துரைப்பாண்டியன் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். இந்தச் சாலையில் தொடா் விபத்துக்களால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா். போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 28, 2024

நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரயில் அட்டவணை வெளியீடு

image

நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.அதன்படி எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 1:50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு எழும்பூர் சென்றடையும். புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.

News August 28, 2024

ரூ.1 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இணை ஆணையர், செயல் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலையில் இன்று (ஆக.27) திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டது. உண்டியல் திறப்பின்போது ரூ.1 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கமும், 432 கிராம் தங்கம், 1398 கிராம் வெள்ளி, 401 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

News August 28, 2024

3 நாட்களுக்கு முடங்கும் பாஸ்போர்ட் சேவை இணையதளம்

image

பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் முன்பை விட தற்போது, விரைவான சேவை வழங்கப்படுவதாக பொதுமக்களிடையே கருத்துகள் நிலவி வந்தன. இந்நிலையில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் ஆக.29 முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது என மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் ஆக.30 மட்டும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது .

News August 28, 2024

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 6633 ஊழியர்கள் பயன்

image

மதுரை கோட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 6633 ஊழியர்கள் பயனடைவதாக மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், மதுரை கோட்டத்தில் மொத்தமுள்ள 8242 ரயில்வே ஊழியர்களில் 1609 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்திலும், 6633 பேர் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.

error: Content is protected !!