India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் நேற்று (ஆக.29) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை 2013 கிலோ கைப்பற்றபட்டுள்ளது. இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும். 597 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்களுக்கு அபராதமாக 80 லட்சத்து 75 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை- நாகர்கோவில், மதுரை-பெங்களூர் ஆகிய 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இழந்த அடையாளத்தை, அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சிக்காமல், கூலிக்காரர்களாகவே சித்தரித்து சிறுமைப்படுத்தி அவர்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் “வாழை” திரைப்படம் அமைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் விமர்சித்துள்ளார். வாழை திரைப்படத்தை வாழ்த்திய திருமாவளவன் தங்கலானை ஏன் வாழ்த்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
உசிலம்பட்டி அருகே நக்கலபட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு இவரதுஆடு ஒன்று காணாமல் போனதால் அதை தேடி சென்றபோது கருப்பசாமி என்பவர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி முருகன் உயிரிழந்தார். சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிழந்ததால் இச்சம்பவத்தை மறைக்க உயிரிழந்த முருகன் உடலை கிணற்றில் வீசிய கருப்பசாமி உள்ளிட்ட 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
பி.எட் மற்றும் எம்.எட் மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி பருவத் தேர்வு தொடங்கியது. இன்று (ஆக.29) நடைபெறுவதாக இருந்த தேர்வின் வினாத்தாள் நேற்று கசிந்தது. இதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் மாற்று வினாத்தாள் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. பி.எட் வினாத்தாள் மதுரை, தர்மபுரி, தூத்துக்குடி, கோவை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கசிந்துள்ளன.
இந்திய அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் மதுரை பிபி குளத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் தெற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. புகார் மனு அனுப்ப விருப்பம் உள்ளவர்கள் செப்., 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரம் அறிய pg.madurai@indiapost.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால் அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ மதுரை ஐகோர்ட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தன்னை கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை நாளை (ஆக.30) ஒத்திவைக்கப்பட்டது.
திருச்சி எஸ்.பி.வருண்குமார் மற்றும் அவரது மனைவியான எஸ்பி வந்திதா பாண்டே குறித்து அவதூறான கருத்துக்களை X தளத்தில் பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாட்டை துரைமுருகன் முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை லேடி டோக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான கல்வி கடன் சிறப்பு முகாமை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து 134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிக்கான காசோலைகளை இன்று (ஆக.29) வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த முருகன் கடந்த 2010 ல் என்கவுண்டர் செய்யபட்டார். இந்நிலையில் முருகனின் தாய் குருவம்மாள் தன் மகன் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெள்ளத்துரை உள்ளிட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட கோரிய மனுவை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் மதுரை ஐகோர்ட் இன்று ஒத்திவைத்தது.
Sorry, no posts matched your criteria.