Madurai

News August 30, 2024

அங்கித் திவாரி ஜாமின் நிபந்தனை சற்று தளர்வு

image

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் நிபந்தனையை சற்று தளர்த்தி இன்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தனது ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பு வாதத்தை ஏற்று வாரம் ஒருமுறைக்கு பதில் 2 வாரத்துக்கு ஒருமுறை கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News August 30, 2024

பத்திரப்பதிவு துறையில் ரூ.4,000 கோடி வருவாய் அதிகரிப்பு

image

பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- வணிக வரித்துறையில் ரூ. 1,42,000 கோடி, பதிவுத்துறைக்கு ரூ.23,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டு ரூ.4,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நியாயமாக தொழில் செய்ய வேண்டும். மக்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி.,யை அரசுக்கு நேர்மையான முறையில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News August 30, 2024

பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்

image

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக காவல் துறையின் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்ய கூடாது என பொன்மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் முன் ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தினமும் காலை 10 மணிக்கு சென்னை CBI அலுவலகத்தில் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News August 30, 2024

மதுரையில் “இன்ஃபின்க்ஸ்” தொழில் நிறுவனம்

image

தமிழக முதல்வரின் அமெரிக்க முதலீடு பயணத்தின் மூலம் மதுரை எல்காட் வடபழஞ்சியில் ரூ.50 கோடியில் 700 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் டெலிவரி மையத்திற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஐடி நிறுவனமான “இன்ஃபின்க்ஸ்” உடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

News August 30, 2024

தீக்குளித்து இறந்த திமுக பிரமுகரின் கடிதம்

image

கடந்த ஆண்டு சிம்மக்கல்லில் தமிழக ஆளுநரை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாகவும் அதில் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தான் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும் தன்னை கட்சியினர் பார்க்க வரவில்லை என மனம் வெறுத்து திமுக தலைமைக்கும் மாவட்டச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கும் பயனில்லை என்றால் ஆகஸ்ட் மாதம் தீக்குளிப்பேன் என குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

News August 30, 2024

மதுரையில் சுகாதார துறையில் வேலை வாய்ப்பு

image

மதுரை மாவட்ட சுகாதார துறையின் இணை இயக்குநர் நலப்பணிகள் உசிலம்பட்டி அலுவலகத்தில் காலிப்பணியிடமாக உள்ள நுண்கதிர் வீச்சாளர் (Radiographer), மருத்துவமனைப் பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு நிரப்பப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் செப்.17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 12 ஆயிரம் பேர் பலன்

image

மதுரை ஆட்சியர் இன்று (ஆக.29) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டத்தில் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 5 அரசு மருத்துவமனைகள், 15 தனியார் மருத்துவமனைகள் என 20 மருத்துவமனைகளில் இதுவரை 12,322 நபர்கள் ரூ.15,35,54,150 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளனர் என்று கூறியுள்ளார்.

News August 30, 2024

மதுரையில் தீக்குளித்த திமுக தொண்டர் உயிரிழப்பு

image

மதுரை மாநகர் திமுக ஆவின் தொழிற்சங்க கௌரவ தலைவர் மானகிரி கணேசன் நேற்று மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்து படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் 80% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 30, 2024

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில், நாகர்கோவில் – தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாரந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29, அக்டோபர் 6, 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

மதுரை ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

மதுரை மேலூர் அருகே உள்ள கள்ளந்திரி முதல் குறிச்சிப்பட்டி வரையிலான வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பைகள் போன்றவற்றை அகற்றி முறையாக மராமத்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிடக்கோரி ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரியார் வைகை பாசன தலைமை பொறியாளர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!