India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக கலெக்டர் சங்கீதா நேற்று செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார். காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், புத்தக கண்காட்சிகள் நாள்தோறும் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள், சிந்தனை பேச்சுக்கள் இடம் பெற உள்ளன.
சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த பல ஆண்டுகளாக முடிக்கிடக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஆலையை திறக்க தமிழக அரசை வலியுறுத்த கோரி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவன ஈர்ப்பு கடிதத்தை சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் இன்று கோரிக்கை மனுவாக அளித்தனர்.
மதுரை திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பவுண்டேஷன், இளம் மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார். 450 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. மதுரையை பசுமையாக்கும் முயற்சியாக அதிக மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் மாணவருக்கு ரூ 1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பார்வை பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தன்னார்வலர்களை உணவு வழங்க விடாமல் தடை செய்யப்பட்டதன் பின்னணியில் நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் தலையீடு இருப்பதாக பொதுமக்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தன்னார்வலர்கள் வழங்கும் உணவால் இந்த உணவகத்தில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் அம்மன் உணவகத்தின் தலையிட்டால் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை-பெங்களூர் ரயிலில் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ. 440, திருச்சிக்கு ரூ. 555, கரூருக்கு ரூ. 795, நாமக்கல்லிற்கு ரூ. 845, சேலத்திற்கு ரூ. 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ. 1555, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ. 1575 கட்டணமாக நிர்ணயிக்க பட்டுள்ளது.இதே ரயிலில் உயர்வகுப்பு மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ. 825, திருச்சிக்கு ரூ. 1075, பெங்களூரு ரூ. 2865 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண்கள் இணைந்து பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக உள்ளக குழு (இன்டர்னல் கமிட்டி) அமைக்க வேண்டும். இக்குழுவை அமைத்து அதனை சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த நிறுவனங்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
கைதிகள் நெரிசலால் மதுரை மத்திய சிறைக்கு பதிலாக மாற்று இடம் கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர், சிறைத்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலைஞரின் அனைத்து வேளாண் திட்டத்தின் கீழ் ரூ.13.72 லட்சத்தில் 30,500 மரக்கன்றுகள், ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ் 25.68 லட்சத்தில் 17,120 கன்றுகள் வழங்கப்பட உள்ளது. வாழை, முருங்கை, கருவேப்பிலை போன்ற தொகுப்பு ரூ.45க்கும், சப்போட்டா, கொய்யா, நெல்லி, பப்பாளி தொகுப்பு ரூ.150க்கும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என துணைஇயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதியுடையோர் வரும் 30.09.2024 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்த மதுரையை சேர்ந்த தீபன், கவுசல்யா தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க இன்று ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தங்களை பெற்றோர் கொல்ல முயற்சிப்பதாகவும், பாதுகாப்பு கோரியும் கவுசல்யா ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், பாதுகாப்பு கோரி சம்பந்தப்பட்ட போலீசாரை அணுகி தம்பதியினர் மனு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.