India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நாளை மறுநாள் (செப்.3) தெற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், மண்டல தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் அனுமதி மறுக்கப்பட்டது, நடிகை நமிதாவை மாற்று மதம் என்ற குளறுபடியால் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களின் எதிரொலியாக இன்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர் புஷ்பராஜ் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது தவழும் மாற்றுத்திறனாளிகளையும் கோவிலுக்குள் அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வாடிப்பட்டி தேனூர் கெங்காமுத்தூர் பெரியகருப்பன் மனைவி கருத்தபிள்ளை 56 கணவர், மகனுடன் தினமும் சாத்தையாறு அணை பகுதியில் உள்ள சொந்தத் தோட்டத்தில் வேலை செய்ய சென்ற போது கடந்த 29ஆம் தேதி மாலை தோட்டத்தில் வலது கையில் விஷ பூச்சி கடித்துள்ளது. இதனால் வாடிப்பட்டி அரசு மாதிரி முதலுதவி செய்த பின்பு மதுரை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் சாலை மேம்பாடு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் தற்போது நடைமுறையில் உள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை-காரியாபட்டி வழித்தட தனியார் பேருந்தில் காரியாபட்டியை சேர்ந்த வழக்கறிஞர் மரகதவள்ளியிடம் ரூ.28 கட்டணத்திற்கு பதில் ரூ.30 வசூலிக்கபட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.2 மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.25002 வழங்க தனியார் பேருந்து நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்கா நகரின் முக்கிய பொழுதுப்போக்கு இடங்களில் ஒன்றாக உள்ளது. வெள்ளி விழா காணும் இந்த பூங்கா தற்போது காலத்திற்கு தகுந்தார்போல் நவீனப்படுத்தப்படாமல் 2கே கிட்ஸ் குழந்தைகளை, இந்த பூங்கா எந்த வகையிலும் ஈர்க்கவில்லை. எனவே இந்த பூங்காவை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை ரேஸ்கோர்ஸ் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறிப்பிட்ட சில பயிற்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான சரியான கட்டணத்தை www.sdat.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் ஆன்லைன் மூலம் செலுத்தினால் போதும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்க மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் மாவட்டத்தின் சுற்றுலா வருவாயை அதிகரிக்க சாகச சுற்றுலாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே இளம் தலைமுறையினரை கவரும் விதமாக மலையேற்றம், காத்தாடி விழா, ஏர் பலூன், ஜிப்லைன், சைக்ளிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக செல்வராணி (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக முதல்வர் ரத்தினவேல் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து பொறுப்பு முதல்வராக தர்மராஜ் நியமிக்கப்பட்டார். பொறுப்பு முதல்வராக பணியில் இருந்த தர்மராஜ் இன்றுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து இன்று முதல் புதிய முதல்வராக (பொறுப்பு) டாக்டர். செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.