Madurai

News September 2, 2024

வணிக நோக்கில் கோவில் பிரசாதம் விற்பனை?

image

பிரசாதம் வழங்கும் இந்து அறநிலையத்துறை பிரசாதங்களை விற்பனை செய்ய ஏன் தனியாரை அனுமதிக்கிறது என்று தெரியவில்லை என மதுரை ஐகோர்ட் அதிர்ப்தி தெரிவித்துள்ளது. அறநிலையத்துறையே தரமான முறையில் பிரசாதங்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். பிரசாத கடைகளை வணிக நோக்கில் தனியாருக்கு குத்தகைக்கு விடும் கோவில் நிர்வாகம் பிரசாதத்தின் தரத்தினை எவ்வாறு உறுதி செய்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

News September 2, 2024

மதுரையில் சதமடித்த வெயில்

image

தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், மதுரை நகரம் தலா 102 ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், தொடர்ச்சியாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

News September 2, 2024

மதுரை- யாழ்பாணம் விரைவில் விமான சேவை

image

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள நிலையில், மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இலங்கை விமான சேவை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 2, 2024

விவசாயிகளுக்கு மதுரை ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரை மாவட்டம், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 04.09.2024 புதன்கிழமை மதுரை நெல்லியேந்தல்பட்டியில் (வேளாண் கல்லூரி அருகில்) நடைபெற உள்ளது. இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் பராமரித்தல் பற்றி விவசாயிகள் அறிந்துக் கொள்ளலாம் என ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

News September 2, 2024

ஆளுநர் கருத்திற்கு எம்பி விமர்சனம்

image

மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இந்நிலையில் ஆளுனரின் கருத்து குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,
புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு என விமர்சனம் செய்துள்ளார்.

News September 2, 2024

மதுரை மாவட்டத்திற்கு அதிக கவனம் செலுத்த உத்தரவு 

image

தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 57.6% சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியுள்ளதால் இங்கு அதிக கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

News September 2, 2024

வாய் பேச முடியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கொத்தனார் முருகன் 45. அப்பகுதியை சேர்ந்த வாய்பேச முடியாத 13 வயது சிறுமியை, வீட்டிற்குள் அழைத்து சென்று தவறான நோக்கத்தில் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உடனே கூச்சலிட்ட சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை அவரை மீட்டார். தப்பிச் சென்ற முருகனை ‘போக்சோ’ வழக்கில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

News September 2, 2024

செப்.5ல் ரேஷன் கடை இயங்காது..!

image

ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,5ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக மாநில செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் செல்லத்துரை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக ரேஷனில் வழங்க வேண்டும், வேறு மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

News September 2, 2024

அரசு பஸ்கள் மோதியதில் 6 பேர் காயம்

image

மேலூர் அருகே தெற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தவமணி(36) தனது ஆட்டோவில் பயணிகளுடன் குறிஞ்சி நகர் பஸ் ஸ்டாப் அருகே இன்று நிறுத்தி விட்டு டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது சென்னை, திருச்சியில் இருந்து வந்த 2 அரசு பஸ்கள் ஒன்றை ஒன்று முந்த முயன்ற போது ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த பரமேஸ்வரி, பிரேமா, லட்சுமி, சிறுவன் ஹரீஷ் உட்பட 6 பேர் காயமடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 1, 2024

பயிற்சி குறித்த அறிவுரைகள் வழங்கிய ஆணையர்

image

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்காக இன்று காவலர்களின் குழந்தைகள் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அங்கு வந்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாணவர்களுக்கு பயிற்சிகள் குறித்தும், செயல் பட வேண்டிய முறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் மாணவர்கள் வெற்றி பெற தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

error: Content is protected !!