Madurai

News September 3, 2024

அரசு பள்ளியில் பயின்று மருத்துவராகும் மாணவி

image

மதுரை மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு சார்பில் வழங்கப்பட்ட நீட் இலவச பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவி ரக்ஸனா நடந்து முடிந்த நீட் நுழைவு தேர்வில் 607 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீடு மூலம் மருத்துவராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை துவங்க உள்ள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News September 3, 2024

நக்கீரர் அலங்கார வளைவை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

image

மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வளைவுகளை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமமின்றி அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயிலையும் அகற்றிட உத்தரவிட்டுள்ளது.

News September 3, 2024

வாடகை செலுத்தாத அறநிலைய துறை

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் அலுவலகம் ரூ.59 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது என்பது ஆர்.டி.ஐ மூலம் வெளியாகியுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ் நகரில் உள்ள கட்டிடத்தில் கடந்த 2017 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நிலையில் ரூ.59 லட்சத்து 65 ஆயிரம் வாடகை பாக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

News September 3, 2024

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் விருதுநகரைச் சேர்ந்த ஆதி ஸ்ரீவிவேகா கடந்த செமஸ்டரில் தோல்வியடைந்த பிசியாலஜி பாடத்தை மீண்டும் எழுதிய நிலையில், அதிலும் தோல்வி அடைந்ததால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மருத்துவர் கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை.

News September 3, 2024

தங்கம் வென்ற வீரருக்கு பயிற்சியாளர் வாழ்த்து

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட நிதீஷ் குமார் திரில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணைய பாரா பேட்மின்டன் முதுநிலை பயிற்சியாளரான மதுரையை சேர்ந்த பத்ரி நாராயணன், நிதிஷ்குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

image

ஒரே குடும்பத்தில் உள்ள பலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று உத்தரவிட்டது. மதுரை சக்கிமங்கலத்தில் தகுதியற்ற நபர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய கோரிய மனுவில், இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News September 3, 2024

இளைஞர் கழுத்தில் குத்தி கொடூர கொலை

image

திருமங்கலம் தாலுகா கூடக்கோவிலை சேர்ந்தவர் கருப்பசாமி 35, இவர் கூடக்கோவிலில் சலூன் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர் கல்லணைக்கு வேலை தொடர்பாக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கருப்பசாமி கல்லணை கண்மாய் கரையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 3, 2024

மதுரையில் “ஸ்கெட்ச்” போடும் காவல்துறை

image

மதுரையில் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க 5 ஆண்டுக்கு முன்பு வழக்குகளில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை, விவரங்களை காவல் துறையினர் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே குற்றச்செயல்கள் புரிந்தவர்களின் வகைப் பட்டியலின் அடிப்படையில் கண்காணிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவோர், ஜாமினில் வருவோரும் தொடர்ந்து சிறப்பு காவல் குழுவினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.

News September 3, 2024

ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

image

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.150 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ரயில்வே துறை தொடர்ந்து ரயில் பயணத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

News September 3, 2024

மதுரை பயிற்சியாளருக்கு குவியும் பாராட்டு

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ்குமார் தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட நிதீஷ் குமார் திரில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பயிற்சி வழங்கிய இந்திய விளையாட்டு ஆணையம்
பாரா பேட்மின்டன் முதுநிலை பயிற்சியாளரான மதுரையை சேர்ந்த பத்ரி நாராயணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

error: Content is protected !!