India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு புத்தக திருவிழா தமுக்கத்தில் செப்.6 முதல் 16 வரை நடை பெற உள்ளது. இதில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் ”சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. செப். 7ல், இறையன்பு ஐஏஎஸ் ”இலக்கியத்தில் காதல்”, செப்.8 வெங்கடேசன் எம்பி யின் ”சித்திரை வீதிகளின் சரித்திரம்”, செப். 9 இந்திரா சௌந்தரராஜன் ”புத்தகம் நேற்று இன்று நாளை” குறித்து பேச உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்திலிருந்து புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 6, 13, 20 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 07, 14, 21 ஆகிய நாட்களில் கொச்சுவேலியிலிருந்து மாலை 3.35 மணிக்கும் புறப்படும்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் சாந்தி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் பிரிட்டோ இனிகோ, முதுநிலை ஆசிரியை நித்யா தேவி, தலைமை ஆசிரியர் அருணாசலம், பட்டதாரி ஆசிரியர் மகேந்திர பாபு, தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, இடைநிலை ஆசிரியர் செந்தில்வேல், தலைமை ஆசிரியர்கள் தென்னவன், ராஜாத்தி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த ஏழு ஆண்டுகளாக 59 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததைக் குறித்து தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாடகை பாக்கியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை, திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது என்றால் ஏன் கால தாமதம் செய்தீர்கள் . எனவே விரைந்து அந்த கல்லூரிகளுக்கான முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த நியமனம் சம்மந்தமான அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
மதுரையில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். வரும் 12 ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் மதுரை சங்கத் தமிழ் காட்சிக்கூட அரங்கில் நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.5000, இரண்டாம்பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் குளிர்பான தரமில்லாத உணவு மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்துவதை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். பேக்கிங் உணவுப்பொருள், குளிர்பானங்கள், ரோட்டு கடை, உணவகம், ஓட்டலில் சாப்பிடும் உணவின் தரம் மீது சந்தேகம் ஏற்பட்டால் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் (94440 42322) புகார் தெரிவிக்கலாம் என்றார்.
மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஆகஸ்ட் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மாநகர காவல்துறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட திருநகரை சேர்ந்த ஆதித்யன் (20), அஜய் (24), பாண்டித்துரை என்ற அய்யாவு (26) ஆகிய மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் வீடுகள் தோறும் நூலகம் என்ற தலைப்பில் தனி நபர் நூலகங்களில் சிறந்த நூலகத்தை தேர்ந்தெடுத்து அதற்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. செப்.10 ம் தேதிக்குள் தங்களது நூலக புகைப்படத்தை எடுத்து அருகில் உள்ள நூலகத்திலோ, மாவட்ட நூலக அலுவலரிடம் அளிக்கலாம். மேலும் dlomdu@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என மாவட்ட நூலக அலுவலர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.