India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோரிப்பாளையத்திலிருந்து அண்ணா சிலை வழியாக வரும் வாகனங்களும் நெல்பேட்டை கீழவாசல் வழியாகவும், அரசரடி வழியாக வரும் வாகனங்கள் TB ரோடு, பெரியார் வழியாக செல்ல அறிவுறுத்தல். இதேபோல் பல்வேறு வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் குற்றசெயல்களை தடுக்கும் பொருட்டு மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரை இணைக்கும் வகையிலான WHATSAPP குழுக்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இன்று தொடங்கி வைத்தார். இந்த குழுக்களில் அந்தந்த காவல் நிலைய எல்கைக்குட்பட்ட மக்களை இணைத்து அவர்கள் குற்ற சம்பவம் குறித்து பதிவிட ஏற்பாடு செய்துள்ளது.
வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1200 ஏக்கரில் நெல் சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. நெல் நடவு பணிகள் முழுமையாக முடிந்து தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் பச்சை பசேல் என பசுமை போர்வை போர்த்தியது போல் பசுமையாக காட்சியளிக்கிறது. எழில் மிகுந்த வயல் வெளியின் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது .
மதுரை மாநகராட்சியில் ‘கொரோனா’ காலத்தில் பூட்டியிருந்த கடைகளுக்கு ரூ.7.95 கோடி வாடகை பாக்கியை மாநகராட்சி நிர்வாகம் தள்ளுபடி செய்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் முறையாக வாடகை செலுத்திய கடைக்காரர்களுக்கு மட்டும் இந்த தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்றனர். நீண்ட நாட்களாக வணிகர்கள் முன்வைத்த கோரிக்கையை மாநகராட்சி ஆணையாளர் நிறைவேற்றியுள்ளார்.
சாட்டை துரைமுருகன் முன் ஜாமின் கோரிய வழக்கு தீர்ப்புக்காக நாளை ஒத்தி வைத்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்த மனு தீர்ப்புக்காக நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு அதிக பலன் என பொய் மூட்டையை கர்நாடக துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கே வந்து தைரியமாக கூறுவதை கேட்டு கூட்டணி தர்மம் என்ற பெயரில் முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் வாய் மூடி மௌனியா இருக்கலாமா? என முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். பாலமேடு பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் பேசிய அவர் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும் என்றார்.
விஜய் நடித்த கோட் (GOAT) திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் முன்பாக பிளக்ஸ் பேனர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க காவல்துறை அனுமதி பெறத் தேவையில்லை எனவும், தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பாண்டி தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில் வானதி சீனிவாசன் அவர்களே, ஆளுநருக்காக நீங்கள் வாதிடுவது பாஜகவின் அரசியல். ஆனால் பாஜக வின் அரசியலுக்காக ஆளுநர் வாதிடுவது அரசியல் சட்ட மீறல். முதலில் சட்ட மீறலை கண்டித்துவிட்டு வாருங்கள். பின்னர் தமிழ்நாட்டு
மாணவர்களும், தமிழ்நாட்டு ஆளுநரும் கற்றுக்கொள்ள வேண்டியதைப் பற்றி விவாதிப்போம் என சு.வெங்கடேசன் வானதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் ஆவின் பாலில் ஓட்டுநா் தண்ணீா் கலப்பதாக ஆவின் விரிவாக்க அலுவலா் ஜான் ஜஸ்டின் தேவசகாயம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் வீடியோவை வெளியிட்டு ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தாக ஜான் ஜஸ்டின் தேவசகாயத்தை சஸ்பென்ட் செய்து ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்.5 முதல் செப்.7 வரை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலுருந்து தென்மாவட்டங்களுக்கு 125 பேருந்துகளும் செப்.8 அன்று மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 120 பேருந்துகளும் மற்றஇடங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்படுவதாக மதுரை மண்டல போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.