Madurai

News September 5, 2024

மதுரையில் காவல்துறை அணிவகுப்பு

image

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகர காவல் துறை சார்பாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று காவலர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. மூன்று மாவடி சந்திப்பிலிருந்து ஆரம்பித்து தல்லாகுளம் பெருமாள் கோயில் வரையிலும், மதிச்சியம் RR மண்டபத்திலிருந்து செல்லூர் கபடி சிலை வரையிலும் அணிவகுத்து சென்று மக்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை வழங்கினர்.

News September 5, 2024

மதுரை கோவை ரயில் பகுதியாக ரத்து

image

கோவை ரயில் நிலையத்தில் பல்வேறு பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் (ரயில் எண்.16722) மதுரை – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் செப்.11 அன்று போத்தனூர் கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. எனவே பயணிகள் மதுரையிலிருந்து போத்தனூர் வரை பயணத் திட்டத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 5, 2024

ஆபாசமாக பதிவிட்ட ஒவ்வொருவரையும் கண்டு பிடிக்க ஐகோர்ட் உத்தரவு

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழக்கில், சாட்டை துரைமுருகனுக்கு இன்று(செப்.05) முன் ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட, ஒவ்வொருவரையும் கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

News September 5, 2024

மதுரை – சென்னை விரைவு ரயில் ரத்து

image

தென்னிந்திய ரயில்வே இன்று(செப்.05) வெளியிட்ட செய்தி குறிப்பில், “மதுரையில் இருந்து இன்று(செப்.5) இரவு 8.50க்கு புறப்படவுள்ள 22624 சென்னை எழும்பூர் விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 6ம் தேதி இரவு 10.05க்கு புறப்படவுள்ள 22623 மதுரை விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

முதல்முறை குற்றவாளிகளுக்கு தனிச்சிறை; மதுரை ஐகோர்ட் கருத்து

image

முதல்முறை குற்றவாளிகளுக்கு மாவட்டங்களில் தனியாக ஒரு சிறை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. முதல்முறையாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபர்களை மத்திய சிறையில் கடும் குற்றம் புரிந்த கைதிகளுடன் அடைக்கும் போது முதல்முறை குற்றவாளி ரவுடியாக மாறி விடக் கூடாது என்பதால் இதுகுறித்து சிறைத்துறை ஐஜியிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க டிஐஜிக்கு உத்தரவிடப்பட்டது.

News September 5, 2024

மதுரையில் ரூ.1015 கோடியில் 212 பணிகள்: அமைச்சர் எ.வ வேலு

image

நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிப்பாளையம் பால பணிகளை ஆய்வு செய்த பிறகு கூறியதாவது : மதுரையில் கட்டுமான பராமரிப்பு துறை சார்பாக 3 ஆண்டுகளில் 212 பணிகள் ரூ. 1015 கோடியில், 281 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு ரூ. 116 கோடியில், 30 பணிகள் மேற்கொள்ள பட உள்ளது. இத்துடன் தரை பாலங்களை மேம் பாலங்களாக மாற்ற, 27 இடங்களில் ரூ. 16.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

News September 5, 2024

மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

மதுரை வ உ சி பிறந்த தினத்தை முன்னிட்டு
இன்று (செப் 5) மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை சிம்மக்கல் வ.உ.சி சிலைக்கு அரசியல் கட்சியினர் சமுதாய மக்கள் மாலை அணிவிக்க உள்ளனர். அண்ணா சிலை வழியாக வரும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக நெல்பேட்டை வழியாகச் செல்ல வேண்டும் அரசரடி வழி வாகனங்கள் மதுரை கோட்ஸ் எம்ஜிஆர் சிலை சந்திப்பில் திரும்பி செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News September 5, 2024

சமையல் எரிவாயு கசிந்து டீக்கடை மாஸ்டர் பலி

image

மதுரை செல்லூரைச் சோர்ந்த முனியாண்டி (64), வருமான வரித்துறை அலுவலகம் அருகே உள்ள தேநீர்க் கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந் நிலையில், இவா் கடையில் உள்ள அடுப்பை பற்றவைத்தபோது, சமையல் எரிவாயு கசிந்து தீப்பிடித்தது. இதில், பலத்த காயமடைந்த முனியாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 5, 2024

அகில இந்திய தொழிற்தேர்வு எழுத வாய்ப்பு

image

மதுரை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் www.skilltrainingtngov.in விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து செப்.18 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

மாணவர்கள் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

image

மதுரை தொழிற்பயிற்சி நிலையத்தில்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தொழிற்பிரிவுகளின் காலியிடங்களுக்கான நேரடிச்சேர்க்கை 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சேர்க்கை அரசு தொழிற்பயிற்சி நிலையம் கோ.புதூரில் நடைபெறுகிறது. சேர்க்கையிடங்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் முதல் வருபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!