India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலூரில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது ஒருவர் அந்த மாணவனை அழைத்து கழிப்பறையில் ஓரினச் சேர்க்கை கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவரின் தரப்பில் மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரை கைது செய்யப்பட்டார்.
மதுரை தியாகராஜர் கல்லூரியின் 2021-2024 வணிக நிர்வாகத் துறையைச் (BBA) சேர்ந்த எஸ்.வர்ஷா, செப்டம்பர் 5, 2024 அன்று, சென்னையில் நடைபெற்ற, தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (SICCI) 114வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து ‘சிறந்த மாணவி விருதை’ பெற்றார்.
மதுரை மாவட்டத்தில் 11.09.2024 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (FL1/FL2/FL3/FL3A மற்றும் FL11) அனைத்தும் 11.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 12.00 மணிவரை மூடப்பட்டு இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை பாசிங்காபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் இன்று(செப்.06) நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை வரவேற்பதற்காக நட்டப்பட்ட திமுக கட்சி கொடிகள் கூட்டம் முடிவடைந்து பின் அகற்றப்பட்டது. அப்போது, கொடி கம்பியை அகற்றும்போது கொடி உயரே இருந்த மின் கம்பியில் உரசியதில் பணியிலிருந்த சிக்கந்தர்சாவடி நவின்குமார்(18) கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலி ரயில் நிலையம் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் ரயில் நிலையம் திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை – மதுரை ரயில் செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையிலிருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதையின் முக்கிய பணிகள் நிறைவுற்றதால் செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை – மதுரை ரயில் வழக்கமான புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
மதுரையில் இன்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் தொடங்கப்பட்ட கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி செல்வார் என அவருக்குதான் தெரியும். அவரை காங். கட்சியில் இணைக்க அழைப்பு விடுக்க அதிகாரம் எனக்கு இல்லை என்றார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நாளை(செப்.07) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள மதுரை மாசி வீதி சுவாமி சன்னதி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள், அவனியாபுரத்தில் 3 கடைகள், வில்லாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் தலா 3 கடைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் இன்று(செப்.06) உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆவின் முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை: பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பாலில் கலப்படம் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் தவறை சுட்டிக்காட்டிய அலுவலரை பணியிடை நீக்கம் செய்த ஆவின் நிர்வாகத்துக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு,ஆவின் முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தல்.
அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் அடிவாரத்திலிருந்து, மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோவில் வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் செப்.9 முதல் செப்.14 வரை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதே வேளையில் இந்த நாட்களிலும் மலை மீதுள்ள கோவில்களில் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் நடந்து சென்று இறைவனை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.