Madurai

News September 9, 2024

மத்திய சிறையை இடமாற்றம் செய்வது அவசியம் – ஐகோர்ட்

image

மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (செப்.9) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்ற வேண்டியிருந்தது மிகவும் அவசியமானது. எனவே, 6 மாதங்களுக்குள் புதிய சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

News September 9, 2024

மதுரை புத்தக திருவிழாவில் ராமர் பெயர் நீக்கம்

image

மதுரை புத்தக திருவிழாவில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து நகைச்சுவை நடிகர் ராமர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் புத்தக திருவிழாவில் பங்கேற்பது தொடர்பாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து நிலவி வந்த நிலையில் அவரது படம் இருந்த பேனரும் பெயரும் இன்று மறைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 9, 2024

Way2News எதிரொலி – நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

image

மேலூர் நகராட்சியின் நொண்டிகோவில் பட்டியில் மீனாட்சி மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் உள்ள கம்பர் சாலையில் ரோட்டோரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நேற்று Way2News-இல் செய்தி வெளியானது. இந்த செய்தி மேலூர் நகராட்சி அலுவலர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் எடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டனர். இதையடுத்து இன்று (செப்.9) நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவ்விடத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர்.

News September 9, 2024

வேளாண் கல்லூரியில் தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

image

மதுரை வேளாண் கல்லூரி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனீக்களின் வகைகள் அவற்றை வளர்ப்பது மற்றும் தேன் எடுப்பது பற்றி நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் 10ஆம் தேதி நடத்தப்படும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் தகவல்களுக்கு 99652 88760 தொடர்பு கொள்ளலாம்.

News September 9, 2024

விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் பலி

image

கொட்டாம்பட்டி அருகே உள்ள அலங்கம்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுவன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது நண்பர்களுடன் இணைந்து வீட்டில் வைத்து வணங்கிய விநாயகர் சிலையை நேற்று (செப்.9) இரவு சைக்கிளின் பின்புறம் வைத்தபடி ஊர்வலமாக சென்று அலங்கம்பட்டி கண்மாயில் கரைக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் விழுந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார். 

News September 9, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள்

image

மதுரை நாகமலை புதுக்கோட்டை செல்லம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; செல்லம்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் நெல் விதைகள் கோ 52 ரகம் 11130 கிலோவும், ஏடிடி 57-2230 கிலோ, டிகேஎம் 13-2840 கிலோ, வெள்ளை சோளம் கோ 32-5420 கிலோ, பருத்தி எஸ்விபிஆர் 6,436 கிலோவும் இருப்பு உள்ளது. இவை 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யபடுகிறது. விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

News September 8, 2024

மதுரையில் தயாரான பிரமாண்ட விழா மேடை

image

மதுரையில் நாளை அரசு சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. சுமார் 25,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ள விழா நடைபெறும் ஒத்தக்கடை சாலை பகுதியில் பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் மாநாட்டு திடல் போன்று பிரமாண்டமாக திடல் அமைக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

ரூ. 7.95 கோடி வாடகை பாக்கி தள்ளுபடி

image

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கடைகளை டெண்டர் எடுத்தவர்கள், கொரோனா காலத்தில் கடைக்கான வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி கடைகளுக்கு வாடகையான ரூ 7.95 கோடியை மாநகராட்சி ஆணையர் தள்ளுபடி செய்தார். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 8, 2024

புத்தக திருவிழாவில் மீண்டும் சர்ச்சை

image

மதுரை புத்தக திருவிழா துவக்க விழா நிகழ்ச்சியில் கருப்பசாமி நடனத்தின் போது மாணவிகள் சாமி ஆடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் 14ம் தேதி திரைப்பட நடிகர் ராமர் அழைக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ராமர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதாலும் புத்தகதிருவிழாவில் நகைச்சுவை நிகழ்வு இடம்பெற வேண்டும் என்பதற்காக அழைக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

News September 8, 2024

பிரபல ரவுடி மரணத்தில் திடீர் திருப்பம்

image

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி பிள்ளையார் கணேசனின் உடல் கருமாத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டது. உடலை மீட்டு நடத்திய விசாரணையில், 2010ம் ஆண்டு முத்துப்பட்டியில் சௌந்தர் என்பவரை பிள்ளையார் கணேசன் மற்றும் கூட்டாளிகள் தலையை துண்டித்து பழங்காநத்தம் பாலம் அருகில் வீசி விட்டு சென்ற சம்பவத்திற்கு பழிக்கு பழியாக 9 ஆண்டுகள் கழித்து சௌந்தர் கூட்டாளிகள் கொலை செய்துள்ளது தெரியவந்தது.

error: Content is protected !!