India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து நேற்று(செப்.11) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகாதார ஆய்வாளர் மற்றும் உள்ளிட்ட 4 பேரிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக 4 பேரை பணியிடை மாற்றம் செய்து அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 25, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் (22671) ரயில் அதற்கு மாறாக காலை 7.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக மதுரையிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ( 22672) அதற்கு பதிலாக மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு, நூல்கள், ஆய்விதழ்கள், இதழ்கள், பிரெயில் படைப்புகள், கையெழுத்துப்படிகள், மின்நூல்கள் என 3.5 லட்சம் நூல்கள் உள்ளன. நூலகம் திறக்கப்பட்டு கடந்த 13 மாதங்களில் அதிகபட்சமாக 11 லட்சம் பேர் சென்று பார்வையிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
மதுரை இயற்கை சந்தை சார்பாக வரும் 15ஆம் தேதி பாரம்பரிய புட்டுத் திருவிழா நடைபெற உள்ளது. ஆவின் பஸ் ஸ்டாப் சிக்னல், கே.கே. நகர் பகுதியில் நடைபெற உள்ள கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய புட்டு வகைகள் இடம்பெற உள்ளன. மேலும் இயற்கையில் விளைந்த காய்கறி, பாரம்பரிய அரிசிகள், பருப்புகள், தானியங்கள், நாட்டு விதைகள் இயற்கையான மதிப்பு கூட்டு பொருட்களும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் கருங்காலக்குடி வஞ்சிநகரத்தில் மரகத பூஞ்சோலை அமைய உள்ளது. தமிழகத்தில் 100 இடங்களில் 100 எக்டேரில் மரகத பூஞ்சோலை வகை காடுகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு வஞ்சிநகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு எக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் முடிந்தபின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுமதி கேட்டு வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட உள்ளது.
சென்னையில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் இருந்த போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இளைஞர் வைத்திருந்த பையை சோதனையிட்டு அதிலிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், உசிலம்பட்டியைச் சோ்ந்த அரவிந்தசாமி என்பதும், மதுரையில் தனியாா் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுவதும் தெரிய வந்தது. போலீசார் அரவிந்தசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையும், எதிர்காலத்தில் நல்வழிகாட்டும் முறைகள் குறித்தும், அவர்களுடைய ஆற்றலை வலுப்படுத்தும் விதமாகவே பேச வேண்டும். இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். மகாவிஷ்ணுவின் பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை. இதனை நாங்கள் ஆதரிக்கவில்லை என கூறினார்.
பேரையூர் அருகே பாப்புரெட்டியபட்டியை சேர்ந்த முத்துராஜன் (49) என்பவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். செங்கல் அறுக்கும் பணியின் போது ஈர செங்கல் மீது நாய்கள் ஏறி நடந்து ஓடுவதால் பணிகள் பாதிப்படைந்ததாக கூறி, முத்துராஜன் மாமிச குடலில் விஷம் வைத்து, அதை சாப்பிட்ட 8 நாய்கள் உயிரிழந்தன. இதுகுறித்த மாரியப்பன் என்பவர் புகாரில் போலீசார் முத்துராஜனை நேற்று கைது செய்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்.9) மதுரையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அரசு திட்டங்களின் நிலை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர்கள், ஆட்சியர், அனைத்து துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் இன்றிரவு மேலூர் சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டது. முன்னதாக நடைபெற்ற கூட்டத்திற்கு மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகிக்க, மாவட்ட பொது செயலாளர் கண்ணன், புறநகர் மாவட்ட தலைவர் குருஜி வரவேற்றனர். முன்னாள் மத்திய இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு ஆற்றினர். விநாயகர் ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்று குளத்தில் கலைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.