India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று(செப்.12) செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் வாக்களித்து தி.மு.க-வை ஆட்சியில் அமர வைத்துள்ளனர், அதனால் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதில் எந்த தவறுமில்லை மேலும், மது விற்பனை இல்லையென்றால் ஆட்சியை நடத்த முடியாது என தி.மு.க – அ.தி.மு.க நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் செப்.14 அன்று நடைபெறும் குரூப் 2 தேர்விற்கு தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு மையத்திற்கு வரவேண்டும். தவறினால் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். காலை 9 மணிக்கு தேர்வு கூடத்தின் கேட் அடைக்கப்படும் அதன் பின்னர் எந்த சூழ்நிலையிலும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மதுரையின் அடையாளங்களில் ஒன்றான வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தற்பொழுது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் தண்ணீர் அளவு சற்றும் குறையாமல் முழுமையாக தண்ணீர் நிரம்பி அந்தி மாலை பொழுதில் தெப்பத்தின் மைய மண்டபத்தின் நிழல் தண்ணீரில் ஓவியமாக காட்சி தந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி வரும் செப்.16ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற உள்ள சுங்கச்சாவடியை இன்று(செப்.12) மமக மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களை அடையாளப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சிலம்பம் விளையாட்டு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை சுற்றி தடுப்புகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம நபர்கள் இரவு நேரங்களில் சிலைகளை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை வந்திருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலுக்கு வரக் கூடாது என நடிகர் விஜய்யை தடுக்க முடியாது, விஜய்யை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கைகளில் உள்ளது.
விஜய்யின் மாநாட்டுக்கு இடையூறு செய்யக் கூடாது, விஜய் மாநாட்டுக்கு கடும் கட்டுபாடுகளை விதிக்கக் கூடாது. விஜய் அரசியல் களத்திற்கு வரட்டும், அவரை நேரில் சந்திக்கலாம்” என்றார்.
ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவுக்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெறும். இன்று(செப்.12) தங்கப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி ஆவணி மூல வீதியில் உலா வந்தனர். வீதி உலாவின் போது வழிநெடுகிளும் திரளான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.
வார இறுதி நாட்கள் மிலாடி நபி வருவதை முன்னிட்டு வரும் செப் 13 மற்றும் 14ம் தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 பேருந்துகளும், 15 முதல் 17 ஆகிய 3 நாட்கள் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 150 பேருந்துகள் ஏகப்பட்ட உள்ளதாக போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் அறிவித்துள்ளது.
மதுரை கட்ராபாளையம் விசாகா மகளிர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதியின் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் உள்ளதால் கட்டிடத்தை ஒரு வாரத்திற்குள் இடித்து அகற்ற கடந்த 13.10.2023 அன்று கட்டிட உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியும் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. முகாமில் 30-க்கு மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று கல்வித்தகுதிக்கேற்ப வேலை தேடுவோர்களை தோ்வு செய்கின்றனா். www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என வேலைவாய்ப்பு துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.