Madurai

News April 5, 2025

மதுரையில் ஏப்.10ம் தேதி டாஸ்மாக் இயங்காது

image

மதுரையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஏப்.10ம் தேதி மது கடைகள் மற்றும் மது கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News April 5, 2025

மதுரை மாவட்ட ரோந்து காவலர்கள் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (04.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படின் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் 100 இல் தொடர்பு கொள்ளலாம்

News April 4, 2025

சிபிஐ(எம்) மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பங்கேற்கும் மாநாட்டு கலை நிகழ்ச்சிகள் இன்று (ஏப்.04) மாலை 5 மணிக்கு மதுரை தமுக்கம் திறந்தவெளி அரங்கில் நடைபெறுகிறது. 

News April 4, 2025

மதுரை மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்திற்கு மேல் தெரு நாய்கள்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சுமார் ஒன்றரை லட்சம் நாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கருத்தடை செய்யாதது ஆண் பெண் நாய்கள் மாநகராட்சி எந்த மண்டலத்தில் அதிக நாய்கள் உள்ளன கட்டுப்படுத்தும் நடைமுறைகள் என்ன என்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கீடுகள் வழிமுறைகள் வகுக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களில் விலாவாரியாக முழுமையான கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

News April 4, 2025

மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

News April 4, 2025

பொன்னூஞ்சலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

image

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பொன்னூஞ்சல் ஆடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேரில் பார்க்க முடியாத பக்தர்களுக்கு SHARE செய்யவும்.

News April 4, 2025

கலக்கத்தில் மதுரை மக்கள்-காரணம் இதுதான்

image

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News April 3, 2025

மதுரை:மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. மாநில அளவிலான விருது பெரும் வட்டார அளவிலான கட்டமைப்புக்கு 5 லட்சம்,ஊராட்சி அளவிலான கட்டமைப்புக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழு ஆய்வு செய்து மாநில மாவட்ட விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.SHARE

News April 3, 2025

பாஜகவின் தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம் – சு.வெ

image

கடுமையான விவாதங்களுக்கு பிறகு, மக்களவையில் நேற்று (ஏப்.2) வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய சு.வெங்கடேசன் எம்பி, “இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிருஸ்தவர்களுக்கும். நாளை மறுநாள் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கும். அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும். பாஜகவினருக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றை முழு நேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள்” என்றார்.

News April 3, 2025

9 பதக்கங்களை மதுரை வீரர் வீராங்கனைகள் வென்றனர்

image

டில்லியில் ‘கேலோ இந்தியா பாரா கேம்ஸ்’ போட்டி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழகத்தில் இருந்து பாரா வீரர்களுக்கான தடகளம், துாக்குதல், டேபிள் டென்னிஸ், இறகுபந்து, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளில் 190 பேர் பங்கேற்றனர்.மதுரை வீரர் வீராங்கனைகள் 9 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

error: Content is protected !!