India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் இந்த காலத்திலும் மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர். இது பற்றி தெரியாத நண்பருக்கு SHARE பண்ணுங்க.
மதுரை கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபி (45). இவர் ரயில்வே போலீசாரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் முதுகுதண்டுவட பிரச்சனையும் இருந்துள்ளது. இந்நிலையில், மனைவி பிரியா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரில் கோபி இறந்து கிடந்துள்ளார். மனைவி புகாரில் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் போக்குவரத்து தடை மற்றும் மாற்றம் செய்துள்ளது. மதுரை விமான நிலையம் முழுவதும் (அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர), மண்டேலா நகர் சந்திப்பிலிருந்து விரகனுார் ரவுண்டானா சந்திப்பு வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விரகனுார் ரிங்ரோடு, மண்டேலா நகர், அருப்புக்கோட்டை சாலைகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றம்.SHARE IT.
நாகரீகம் வளர்ந்து வரும் நவீன காலத்தில்மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்
சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர் கிராமத்தினர்.
மதுரை மாவட்டத்தில் இன்று (05.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் எவருக்கேனும் உதவி தேவைப்படும் ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.
இணையதளங்களில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் ஆர்டர் செய்யாத உணவு, தங்களுக்கு வந்திருப்பதாக கூறி அதை திருப்பி அனுப்ப OTP கேட்கும் நபர்களிடம் எந்த விபரமும் தெரிவிக்க வேண்டாம் என்று மதுரை மாநகர் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரின் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறது.
மாநிலத்தின் பல பகுதியில் தக்காளிக்காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது தோலில் சிவப்பு நிற அரிப்பு ஏற்படுத்தும் மற்றும் பரவும் அபாயம் உள்ள நோயாகும். தங்கிய நீர், அசுத்தமான சூழல் போன்றவை இதன் முக்கிய காரணங்கள் என்பதால், பொதுசுகாதார நிபுணர்கள் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 530 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் பயனாக, 2023ஆம் ஆண்டில் இருந்த 835 டெங்கு பாதிப்பு 2024ஆம் ஆண்டில் 348 ஆகக் குறைந்துள்ளது, இது 41.48% குறைவாகும். மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுகாதார நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி, சர்வீஸ் இன்ஜினியர்,மேலாளார் உள்ளிட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் தகுதிகேற்ப ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும். <
Sorry, no posts matched your criteria.