India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு (மி.மீ.) மதுரை வடக்கு 25.4, தல்லாகுளம் 22.6, பெரியபட்டி 45.2, விரகனுார் 0.4, சிட்டம்பட்டி 7.2, கள்ளந்திரி 53, இடையபட்டி 31, தனியாமங்கலம் 8, மேலுார் 4.2, புலிப்பட்டி 4, சாத்தையாறு அணை 2, மேட்டுப்பட்டி 47.6, ஆண்டிப்பட்டி 0.8, பேரையூர் 4.6, எழுமலை 0.8, கள்ளிக்குடி 12.24 பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் குறுவை பருவ நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டு திட்டம் ஆக.14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகளில் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு நகல், ஆதார் அட்டையுடன் பதிவு செய்யலாம். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.720 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து கடந்த 2ஆம் தேதி என 15 நாட்களில் நகரப்பகுதியில் 26 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 50 முகாம்களும் என மொத்தம் 76 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற நகரப் பகுதிகளில் 18,502 மனுக்களும், ஊரகப்பகுதிகளில் 21,387 மனுக்கள் என மொத்தம் 39,889 மனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் நாளை (ஆக.07) பெரும்பாலான பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. மேலவளவு, திருவாதவூர், அ.வல்லாளபட்டி, கண்ணனேந்தல், திருப்பாலை, மாகாளிபட்டி, வில்லாபுரம், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட துணை மின்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இந்தத் தகவலை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. Share It.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வைரம் பதித்த வேல் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி கோவில் நிர்வாகத்தின் அறிக்கையில், இத்திருக்கோயிலுக்கு சுமார் 770 கிராம் எடை கொண்ட தங்க வைர ஜாதி சிகப்பு கல், ஜாதி பச்சை கல் பதித்த தங்கவேல் ( CULTURAL SAMSKRITHI FOUNDATION ) என்ற உபயதாரர் மூலம் பெறப்பட்டது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையில் நடக்கவுள்ள தவெகவின் 2 ஆவது மாநில மாநாடு, பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் ஆகஸ்ட் 21 ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் மிகவும் பாதுகாப்புடனும், பொறுப்புணர்வுடனும் கலந்து கொள்ளுமாறு தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், முல்லைப் பெரியாரின் நீர் வரத்தாலும் வைகை அணை நீர்மட்டம் 69 அடி எட்டிய நிலையில், நீர்வளத்துறை சார்பில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
மதுரை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரைக்கு சுமார் 60க்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே<
▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.
Sorry, no posts matched your criteria.