India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசாரால் இன்று துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராமசபைக் கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு விவாதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் அறிவால் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சமயநல்லூரைச் சேர்ந்த சூர்யா 23, கண்ணன் 23 என்பதும் ஜாமினில் வெளிவந்த சரண் என்பவரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்தது தெரயவந்தது.
மதுரை கீரைத்துரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி 5 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பிரபல ரவுடி சபா ரத்தினம் மற்றும் நாக முருகன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (மார்ச்.28) அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில், பிரபல ரவுடி சபா ரத்தினத்திற்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தை இறப்புக்கு முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையாரான இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்கம் பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலில் 21 இளங்கலை பட்டப் படிப்புகள்,20 முதுகலை பட்டப் படிப்புகள் மார்ச் 31 வரை நடக்கின்றன. இதன் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பல்கலைக்கழக கல்வியின் இணையதள வழியாக நடைபெறுகிறது.சேர விரும்பும் மாணவர்கள் https://mkuniversityadmission.samarth.edu.in/ என்ற பல்கலைக்கழக இணைய நல முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் திரு. இரா.சுப்புராம் அவர்கள் (வயது 79) இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய இறுதி நிகழ்வுகள் இன்று மாலை, மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறும். மேலும் சு.வெங்கடேசன் தந்தைக்கும் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் CITIIS 2.0 பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் விபரங்களை www.maduraicorporation.co.in மாநகராட்சி என்ற இணையதள முகவரியில் இப்பணிக்கு விண்ணப்பம் விரும்புவோர்கள் எதிர்வரும் 03.04.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மதுரையில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 3 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிப்.2ல் குடும்ப பிரச்சினையில் நாகையாபுரம் காவல் நிலைய காவலர் சிவா வெட்டி கொலை செய்யப்பட்டார். மார்ச் 18ல் காளையார் கோவில் தனிப்படை காவலர் மலையரசன் ஆட்டோ ஓட்டுநரால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற சுகாதார நிலையங்களில் மகப்பேறு மரண விகிதம் 2023-2024-ஆண்டுகளில் 39.70% இருந்தது. மாநகராட்சியின் உரிய நடவடிக்கையினால் 2024-2025-ஆம் ஆண்டில் 21.60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிசு மரண விகிதம் 2023-2024-ஆம் ஆண்டுகளில் 7.8% இருந்தது. மாநகராட்சியின் உரிய நடவடிக்கையினால் 2024-2025-ஆம் ஆண்டில் 6.18% ஆக குறைக்கப்பட்டுள்ளது என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தகவல்.
Sorry, no posts matched your criteria.