India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.10) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் நாளை ஒருநாள் மூடப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட நாட்களையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் கன்னியாகுமரி சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கன்னியாகுமரி சென்று சேரும். இது 10, 17 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் அதிக குப்பை சேர்ந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தீர்வு காண அதிக குப்பை சேரும் இடங்களில் AI தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் நிறுவுவதற்காக தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தில் (டி.ஏ.என். ஐ.ஐ) அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து விரைவில் மாநகராட்சியில் 80 இடங்களில் ஏ.ஐ கேமரா பொறுத்தப்பட உள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மே 10 மாலை 6 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 12 ல் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.தொடர்ந்து சேஷ வாகன,கருட வாகன புறப்பாடு மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். உங்க ஊர் திருவிழா நீங்க தான் எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தனும்.#SHAREALL
மதுரை மாவட்ட ஆட்சியர் 0452-2531110, மாவட்ட வருவாய் அலுவலர் 0452-2532106,
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் 0452-2533272, மாவட்ட வழங்கல் அலுவலா் 0452-2546125,
பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினா் நல அலுவலா் 0452-2529054,
ஆதி திராவிடா் (ம) பழங்குடியினா் நல அலுவலா் 0452-2536070,
உதவி இயக்குநா் (நில அளவை) 0452-2525099. மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும் .
மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி துரைசிங்கம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த துரைசிங்கம் நேற்று வீட்டிற்குள் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தில், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
மதுரையில் சித்திரரை திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைத்து சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்புரம் தலையங்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மதுரை,வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திலும் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.
மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
பங்குசந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும் என கூறி ரூ.24 கோடி மோசடி செய்ததாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களாக மூதலீட்டிற்கான லாப தொகை வழங்கியதால் அதை நம்பி முதலீடு செய்துள்ளோம் என புகார் அளிக்க வந்தவர் தெரிவித்துள்ளவனர்.ஒவ்வொருவரும் தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்து இழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.