India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் இன்று (நவ.20) வரை சுமார் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மதுரை சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு கிராம மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தநிலையில், அவர்ளை வெளியேற்ற வேண்டாம், நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும், நோட்டீஸை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றலாம், அதுவரை நடவடிக்கை கூடாது என தெரிவித்து ஆட்சியர் பதில் தர உத்தரவு.
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணபிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தற்போது இன்று(நவ.20) தகவல் வெளியாகியுள்ளது. பின் அனுமதியளித்த மத்திய அரசு எந்த பகுதியில், எந்த அளவுக்கோலில் அனுமதி அளித்தது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சுரங்கம் அமைப்பது குறித்து சில தினங்களாக தமிழ்நாட்டில் கருத்து அலைகள் வீசிவந்த நிலையில் அது குறித்த விளக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் தொடர் மழை பெய்து வருவதால் நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது. மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு டெங்கு பாதித்துள்ளது. எனவே மக்கள் வீடுகளில் தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் என சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மதுரை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
மதுரையில் மேம்பால பணிகளுக்காக கோரிப்பாளையம், செல்லூர் பகுதிகளில் இன்று(நவ.20) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நத்தம் சாலை, அழகர்கோவில் சாலையில் இருந்து வரும் அரசு பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கரவாகனங்கள் மட்டும் அவுட் போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு வந்து, அங்கு வலதுபுறம் திரும்பி கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஏ.வி. பாலம் செல்ல வேண்டும்.
மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை கடந்த 6 ஆண்டுகளில் 542 விபத்துகள் நடைபெற்றுள்ளது. அதில் 137 பேர் மரணமடைந்துள்ளதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமயநல்லூர் டிஎஸ்பி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க கோரி செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கு காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்று SPARSH மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர், அவர்தம் விதவைகளுக்காக SPARSH OUTREACH நிகழ்ச்சியில் SPARSH ன் ராணுவ ஓய்வூதிய குறைபாடுகள் களைய பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர்கள் மூலம் ராணுவ ஓய்வுதிய குறைதீர் கூட்டம் மதுரை மடீசியா ஹாலில் வரும் 22 ஆம் தேதி 9 மணியளவில் நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களுக்கு ST சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து காட்டு நாயக்கர் பிரிவினருக்கு ST சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரை மாவட்ட இரவு நேர காவலர்களின் ரோந்து பணி விபரம் மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊமச்சிகுளம், சமயநல்லூர், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.