India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் பிர்லா விஸ்ரம் கட்டடத்திற்கு தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று இன்னும் பெறப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மேலசித்திரை வீதியில் உள்ள இந்த விடுதிக்கு 53 ஆண்டுகளாகியும் இதுவரை தீயணைப்பு- துறையின் தடையின்மை சான்று பெறவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கும் 8ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. மாத ஊதியமாக ரூ.58,100 வரை வழங்கப்படும். இந்த மாதம் 14ம் தேதிக்குள் <
திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஆக. 18 முதல் ஒரு மாதத்திற்கு எலக்ட்ரிகல் வயரிங், சர்வீசிங் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு SHARE செய்யவும்.
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள செவன்த் டே மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக மதுரையை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் துாய்மையான நகரங்களின் பட்டியலை சமீபத்தில் இந்த அமைச்சகம் வெளியிட்டது. அதில் மதுரை மாநகராட்சிக்கு கடைசி இடம் வழங்கப்பட்டது அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் அதே அமைச்சகத்தால், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. SHARE IT..!
மதுரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை 0452-2580259 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
மதுரை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் (07.08.2025) நாளையும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.அதன்படி திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகால் தெருக்கள் மேலும் எங்கெல்லாம் மின்தடை என்பதை <
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன் விஷ்னுவர்தன். பள்ளி மாணவரான இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னாலிருந்து வந்த ஆட்டோ சிறுவன் சென்ற சைக்கிளின் மீது மோதியதில் சிறுவன் விஷ்ணுவர்தன் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பாலச்சந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 100 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக பணிக்கேற்ப ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 29.08.2025 க்குள் <
Sorry, no posts matched your criteria.