Madurai

News March 24, 2025

மதுரையில் 3நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையத்தில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டியின் அருகில் செல்லும் மெயின் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி தரப்பினர் மேற்கொள்ள இருப்பதாலும் , புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாட்கள் ( மார்ச் 26,27,28) மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு

News March 24, 2025

மதுரை மாநகராட்சியின் முடிவில் திடீர் மாற்றம்

image

மதுரை மாநகராட்சியில் மாடுகள் வளர்ப்புக்கு ரூ.500, குதிரை ரூ.750, ஆடு ரூ.150, பன்றி ரூ.500, நாய், பூனை ரூ.5750 என கடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கட்டணம் விதிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதால் திருத்தப்பட்ட கட்டணத்தை செயல்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

News March 24, 2025

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பலி

image

வாடிப்பட்டி விராலிப்பட்டியை சேர்ந்தவர் சிவா-பவித்ரா தம்பதி. இவர்களுக்கு சாய்குமார் (8), சிவகார்த்திக் (4) ஆகிய 2மகன்கள் உள்ளனர். நேற்று பவித்ரா வீட்டில் சமையல் செய்த போது வீட்டுக்குள் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் சிவகார்த்திக் திடீரென மயமானார். தேடி பார்த்தபோது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் சிவகார்த்திக் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News March 24, 2025

கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை 24-03-2025 வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

News March 24, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 23, 2025

மதுரை டைடல் பார்க்கில் வேலை

image

மதுரை டைடல் பார்க் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 23, 2025

பாதாள சாக்கடை பம்பிங் நிலையம் அமைக்க தடை – ஐகோர்ட் உத்தரவு

image

மதுரை: உத்தங்குடியில் லே அவுட் பெறப்பட்ட இடத்தில் பாதாள சாக்கடை பம்பிங் நிலையம் அமைக்க தடை விதிக்க கோரி நவநீதன், வளையாபதி, தங்கதுரை உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பம்பிங் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

News March 23, 2025

தெப்பக்குளம் கோவில் எதிரே ஆண் சடலம் மீட்பு

image

மதுரை தெப்பக்குளம் காலபைரவர் கோவில் எதிரே அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக அப்பகுதியின் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தெப்பக்குளம் போலீசார் விசாரணையில் இறந்தவர் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராஜா 50 என்பதும் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதும் தெரியவந்தது.

News March 23, 2025

மதுரை இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

image

சிவகங்கை,பள்ளத்துரை சேர்ந்தவர் பழனி என்ற பழனிச்சாமி. இவர் மீது 2023ம் ஆண்டு காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். அப்போது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரவில்லை.இதை தொடர்ந்து அவருக்குப் பிடி வாரன்ட் பிறபித்து நீதிபதி உத்தரவிட்டார். தற்போது சில்வியா ஜாஸ்மின் மதுரையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

error: Content is protected !!