India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கள்ளழகர் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வருகிறார். அந்த வகையில் ஒன்பதாவது நாளான நேற்று இரவு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.நேரில் பார்க்க முடியாதவருக்கு SHARE செய்யவும்.
மதுரை மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இங்கே<
மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் காவலர் மருத்துவமனைக்கு வேண்டிய மருத்துவ உபகரணங்களான தெர்மா மீட்டர், stretcher, எடை இயந்திரம், உயரம் அளவிடும் கருவி மற்றும் சக்கர நாற்காலி போன்றவற்றை இன்று (ஆக.09) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் காவலர்களின் நலன் கருதி காவலர் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கினார். பின்னர் திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டபின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கியவரை திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️SP – 0452-2539477,0452-2539466
▶️ADSP – 9498102171, 9443175424, 9498154615
▶️மேலூர் (DSP) – 9498180078
▶️உசிலம்பட்டி (DSP) – 9442525524
▶️சமயநல்லூர் (DSP) – 9566129088
▶️பேரையூர் (DSP) – 6374643101
▶️திருமங்கலம் (DSP) – 9958380462
▶️திருப்பரங்குன்றம் (DSP) – 9443124892.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Photography, Videography, Layout and Designing, Video Editing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஆக.13ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபர்த்தியில் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தவெகவினர் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில், குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக வருகை தருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.