India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் கட்டப்பஞ்சாயத்திற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளது. முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இத்தலம், ஆறுபடை வீடுகளில் முதலாவது வீடு என்பதால், முருகனின் அருள் மிகச் சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.பக்தர்கள் அனைவருக்கும் SHARE செய்யுங்க.
பளு தூக்குதல் பயிற்றுநர் பணிக்கு தகுதியுடைய வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். பளு தூக்குதல் விளையாட்டில் தேசிய விளையாட்டு நிறுவனம், இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழைப் பெற்றவர்கள் வரும் 20ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று பெற வேண்டும். SHARE
மதுரையில் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2020ல் மொத்தம் 44 ஆயிரத்து 216 பேர் நாய்க்கடிக்கு ஆளாகினர். 2021 ல் 48 ஆயிரத்து 323 பேரும், 2022 ல் 46 ஆயிரத்து 962 பேரும், 2023ல் 47 ஆயிரத்து 291 பேரும், 2024ல் 45 ஆயிரத்து 404 பேரும் பாதிக்கப்பட்டனர். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.வி. தடுப்பூசி செலுத்த வேண்டும் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட் கிராட் நிறுவனத்தில் ஏப்.15 முதல் ஒருமாத கம்ப்யூட்டர் மற்றும் இலவச டெலிகாலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, MS WORD, EXCEL, போட்டோஷாப், கோரல் டிரா பயிற்சிக்கு பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். ஊக்கத் தொகை, மத்திய அரசின் சான்றிதழ் உண்டு. 93452 02324 எண்ணில் அழைக்கவும். SHARE செய்து உதவவும்.
மதுரை மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 448 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்*
செக்கானுாரணி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 24, லாரி டிரைவர். இவர் நேற்று திண்டுக்கல் மதுரை 4 வழிச்சாலையில் டிப்பர் லாரியில் கற்கள் ஏற்றி வந்தார்.குலசேகரன்கோட்டை ஆஞ்சநேயா கோயில் அருகே வந்தபோது முன்பக்க லாரி டயர் வெடித்தது.லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணன் இறந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவர்களுக்கு SHARE செய்து தினமும் லாரி எடுக்கும் முன் டயரை செக் பண்ண சொல்லுங்க.
மதுரை மாநகரில் இன்று (11.04.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.
மதுரை அனுப்பானடி, புது ராம்நாடு சாலையில் உள்ள கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அப்பகுதியின் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் இறந்தது யார் இறப்புக்கான காரணம் என்ன என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.