India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செப். 2-ஆவது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் இதில் சேரலாம். விவரங்களுக்கு பேராசிரியர் 9942279190, 7339002390, உதவியாளர் 9500771299 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் மண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (02.09.2024) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் வழங்கினர். உடன், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார்,தேன்கனிக்கோட்டை தனி தாசில்தார், சூளகிரி தாசில்தார், போச்சம்பள்ளி தாசில்தார், அஞ்செட்டி தாசில்தார், சிப்காட் யூனிட்-3, பகுதி -3 தனி தாசில்தார், ஓசூர் இனாம்செட்டில்மெண்ட் அலகு-2 தனி தாசில்தார், ஓசூர் தாசில்தார் உட்பட 11 தாசில்தார்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று கரையை கடந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்த 22 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 22 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட எஸ்பி தங்கதுரை நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட எஸ்பி பரிந்துரையை ஏற்று மாவட்ட கலெக்டர் சரயு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் 526 ரவுடிகள் உள்ளனர்.
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற மாபெரும் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு வேலைக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.
ஒசூர் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையை சேர்ந்த காளியப்பன்(62) என்கிற ஓட்டுநர் கண்டெய்னர் லாரியில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி வந்துள்ளார். பின்னால் வந்த கணரக லாரி மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளில் இடித்து சர்வீஸ் சாலையில் விழுந்தது. லாரியை மீட்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி தோப்பு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜு (66) ஜவுளி வியாபாரி. இவரும் இவரது மனைவி ராதாருக்குமணி 2 பேரும் துணி வியாபாரம் செய்ய காரில் சென்றனர். காரை கோவிந்தராஜு ஓட்டிச்சென்றார். அப்போது அஞ்செட்டி அடுத்த கத்திரிப்பள்ளம் வனப்பகுதி சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் கோவிந்தராஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சரயு தலைமை–யில் நடைபெறுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை இரட்டை பிரதியில் செப் 30-ந் தேதிக்குள் ஆட்சியருக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாலூர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த நந்தகுமார்(22) என்பவர் தங்கை முறைக்கொண்ட 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி ஒசூர் அடுத்த கோவிந்த அக்ரகாரம் என்னும் கிராமத்தில் உள்ள மாமா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நந்தகுமார் சிறுமியை கடத்தி சென்ற நிலையில் பெற்றோர் அளித்த புகாரில் நந்தகுமார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.