India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக் 4ஆம் தேதி நடைபெறவிருந்தது. அது ஒத்திவைக்கப்பட்டு அக் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தங்களது மனுக்களை செப் 30க்குள் 2 செட் ஜெராக்ஸ் காப்பியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது.
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஓசூர் மாணவி நித்யஸ்ரீ சிவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் சரயு நித்யஸ்ரீ வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் கோபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் கைதான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் மூலம் பாலியல் குற்றங்கள் நடந்த நிலையில் அந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பாக 709 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 920 பயனாளிகளுக்கு ரூ.46 கோடியே 49 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று வழங்கினார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற 10.09.2024 முதல் 13.09.2024, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 17.09.2024 முதல் 24.09.2024, பொது மக்களுக்கான போட்டிகள் 19.09.2024 முதல் 21.09.2024, மாற்றுத் திறனாளிகள் பிரிவு போட்டிகள் 23.09.2024அன்றும், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் 24.09.2024 அன்றும் கிருஷ்ணகிரி,ஓசூர், நாகரசம்பட்டி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வந்த புகார்களின் பேரில் போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக மஞ்சு ( 25) உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர்.இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லாமலிருக்க தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நாளை முதல் 24.9.24 வரை நடைபெற உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் என தனித்தனியே நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 04343 291727, 7401703487.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் இளம்வயது திருமணங்களும், மாணவர்கள் இடைநின்றலும் அதிகமாக உள்ளன. இதை தடுக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கண்டறியப்பட்ட 8,823 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓசூர் ஸ்ரீநகரை சேர்ந்த இளைஞர் குழுவினர் நேற்று சென்னை ஐகோர்ட்டு போன்று விநாயகர் அரங்கு செட் அமைத்து கோர்ட்டில் நீதிபதியாகவும், மற்றும் வக்கீல்கள், போலீசார் என 14 விநாயகர்கள் நீதி பரிபாலனை செய்யும் வகையில் செட் அமைத்திருந்தனர். கோர்ட்டில் நீதிபதியாகவும், வழக்காடும் விநாயகர்கள், குற்றவாளி கூண்டில் எலி வாகனம், கோர்ட்டு வளாகத்தில் காந்தி சிலை, இருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.