India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
கிருஷ்ணகிரியில் அக்.5 பிரேமலதா, விஜய் குறித்த நேரத்தில் வரவில்லை முதல் தவறு,
அரசாங்க காவல்துறையை நம்பியது 2வது தவறு, தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்காதது 3வது தவறு, வாகனத்தில் நிண்று வந்து இருக்கலாம், பேரூந்துக்குள்ள புகுந்துகிறாரு, சின்ன கண்ணாடியில் எட்டிப்பாக்குறாரு, இது 4வது தவறு, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருகாங்க, இன்று வரை வெளியே வராதது தவறு, இது 5வது தவறு என்று கூறினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். கிருஷ்ணகிரி மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!
கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் நீதிபதிகள் குறித்து அவதூறாக பதிவிட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சசிகுமார் என்பரையும் கைது செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பாா்வதிநகரில் வீடு இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவன் சூடப்பா (19) காயமடைந்தாா். மழையின் தாக்கத்தால் அதிகாலை 5 மணியளவில் சுவா் இடிந்து அவர் மீது விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. அவரை ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீஸாா் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் முன் பக்கத்தில் உள்ள சுற்றுச்சுவர் இன்று அதிகாலை கனமழைக்கு இடிந்து விழுந்து சேதமானது. இதில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், தள்ளுவண்டிகள், மின்கம்பம், மருத்துவமனை சார்பில் வைக்கப்பட்டிருந்த போர்டுகள் ஆகியவை சேதமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.