India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.300 மானியத்துடன் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும். <
தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(45). டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் கூட்ரோட்டில் உள்ள தனது நண்பரான மாயக்கண்ணன் என்பவரை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இன்னும் வீடு திரும்பாததால் அவரது மனைவி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி<
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு ரூ.64,000 -ரூ.94,000 வரை சம்பளம் வழங்கப்படும். 23-34 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் அக்-10க்குள்<
அரசு, நான் முதல்வன் திட்டத்துக்கு பின், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5 இலவச சான்றிதழ் படிப்புகளை அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி 150 மணி நேரம் நடைபெறும். தகுதி: CSE, ECE, EEE, BCA, B.Sc CS, (அ) கணினி பாடம் கொண்ட பட்டதாரிகள். வயது: 21–25 வரை, 2021–2025 க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். tnskill.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 1,896 ஓட்டுச்சாவடிகளில், 100 % களப்பணி மேற்கொள்ளப்பட்டு, 1,200 வாக்காளர்களுக்கு மேலுள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்தும், நிர்வாக நலன் கருதி, 1,200 வாக்காளர்களுக்கு குறைவாக உள்ள சில ஓட்டுச்சாவடியை 2ஆக பிரித்தும் புதிதாக, 194 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம், 2,090 ஓட்டுச்சாவடிகள் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தயாராகி உள்ளது. இறுதி பட்டியல் வெளியிட ஆலோசனை நடக்கிறது.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்-06 ஆட்சியர் தினேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம்,பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்தனர். மனுவிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனு தெரிவிக்க வேண்டும் என்றார்
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற<
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு& ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.,6) 84.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, போச்சம்பள்ளியில் பகுதியில் அதிகபட்சமாக 16.0 மி.மீ மழை பெய்துள்ளது. இது தவிர, ஓசூர் (கெலவரபள்ளி அணை) பகுதியில் 16 மி.மீ மழையும், ஊத்தங்கரை (பாம்பாறு அணை) 12 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.