India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 117 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் <
பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் கிருஷ்ணகிரி நகரத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன் கிளை மேலாளர் தமிழரசு தகாத வார்த்தையால் திட்டியதாகவும், பணி செய்ய விடாமலும், பணி மாறுதல் வழங்காமலும் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனம் உடைந்த வெங்கடேசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இளம் பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர் ஓராண்டு புத்தாக்கம் சான்றிதழ் படிப்பிற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வகுப்புகள் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது. மேலும்
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சிவபாரத் 8680802707, 8668107552,
8668101638 என்ற எண்ணில் அழைத்து விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை உள்ள நிலையில் மழை,வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள தமிழக அரசு TN-Alert என்ற இணையதள செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் வானிலை முன் அறிவிப்பு,தினசரி பெறப்பட்ட மழையளவு, நீர்த்தேக்கங்களின் தற்போது நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.drbkrishnagiri.net என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 07.11.2024 பிற்பகல் 5.45மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 117காலி பணியிடங்கள் உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் நாளை இளைஞர் எழுச்சி நாளாக தமிழகமெங்கும் கொண்டாட தமிழக அரசு தெரிவித்துள்ளதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக் 9 முதல் 15ம் தேதி வரை அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடையே கட்டுரை, பேச்சு, அறிவியல் கண்காட்சி போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க பர்கூர் பேரூராட்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை தலைமையில் சொத்து வரி, பேருந்து கட்டணம், ஆவின், மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஓசூர் அருகே பாகலூரைச் சேர்ந்தவர் சிவஜோதி (42). இயற்கை ஆர்வலரான இவர் பாகலூரில் இருந்து சென்னை நோக்கி ‘எமர்ஜென்சி ஃபார் எ நியூ பிரீட்’ என்ற எழுத்துக்களைக் கொண்ட பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இயற்கை பேரிடர் மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்றவற்றை தடுக்க தன்னிடம் தீர்வு உள்ளதாக கூறி அவர் முதல்வரை பார்க்க செல்வதாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.