India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் 8000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான 2025–2026 ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்ட இத்தொகை, இவ்வாண்டு முதல் 150 பேருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. www.tamilvalarchithurai.tn.gov.in (அ) மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். கடைசி நாள் 17.11.2025 என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
கிருஷ்ணகிரி மக்களே…! கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது (தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் <
கிருஷ்ணகிரி மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க <
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அக்-8 உங்களுடன் ஸ்டாலின் முகாம்
1)ஓசூர் மாநகராட்சி-வார்டு 43,44 & 45, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மத்திகிரி
2) கெலமங்கலம் பேரூராட்சி-வார்டு 9 & 15, எஸ் ஆர் திருமண மண்டபம் கெலமங்கலம்
3) கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம்-சந்தம்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சந்தம்பள்ளி
4) தளி ஊராட்சி ஒன்றியம்-நாட்றம்பாளையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்றாம்பாளையம். ஷேர் IT
கிருஷ்ணகிரி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இந்த மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெறும். அதன்படி வரும் அக்.10 அன்று மாலை 2 மணி வரை மனு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் பேச மூன்று கோரிக்கை மனுவாக வேளாண்மை துறையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அளிக்க வேளாண்மை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக உணவில் தேரை, பல்லி, பாம்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
அக்-8 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: 1.ஓசூர் – அரசினர் மேல்நிலைப்பள்ளி, 2.கெலமங்கலம் டவுன் – எஸ்ஆர்எம் திருமண மண்டபம், 3 (சந்தனபள்ளி) – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 4.காவேரிப்பட்டினம் – அண்ணா திருமண மண்டபம், 5.தளி (நாட்றாம்பாளையம்) அரசு மேல்நிலைப்பள்ளி, 6.சூளகிரி- (அரசு மேல்நிலைப்பள்ளி பேரிகை) இதில் மகளிர் உரிமைத் தொகை, உள்ளிட்ட 47 துறைகளில் கோரிக்கை மனுவை விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் வராகசந்திரம் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான 5 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு குழுவும் அரசு அருங்காட்சியகமும் இணைந்து நடத்திய ஆய்வில், போரில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்காக அமைக்கப்பட்ட நடுகற்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குதிரை வீரர் நடுகல் முக்கியத்துவம் பெறுகிறது.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.300 மானியத்துடன் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும். <
தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(45). டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் கூட்ரோட்டில் உள்ள தனது நண்பரான மாயக்கண்ணன் என்பவரை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இன்னும் வீடு திரும்பாததால் அவரது மனைவி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.