India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <
இந்தியன் வங்கியின் அப்பரண்டிஸ் பயிற்சிக்கு 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்கி பணிக்கு செல்லும் கனவோடு தேர்வுக்கு தயாராகி வரும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்பரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பயிற்சியின் போது 15,000 வரை ஊக்க தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். <
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.6) ஓசூர் மாநகராட்சியில் பாலாஜி நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி, கிருஷ்ணகிரி நகராட்சியில் பாத்திமா சமுதாய கூடம், மத்தூரில் சிவம்பட்டி சமுதாய கூடம், ஊத்தங்கரையில் கல்லாவி சாலை ஸ்ரீவெங்கடேஸ்வரா மஹால், கெலம்பங்கலம் வட்டாரத்தில் தொட்டமேட்ரை VPRC கட்டடம், தளி வட்டாரத்தில் பெலகொண்டப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
இன்று 05/08/2025., போச்சம்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் e-NAM (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் நேரில் கலந்துரையாடினார். விவசாயிகளின் தேவைகள், சந்தை நிலைமைகள் குறித்து கேட்டறிந்து, சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி மக்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு குற்றச் செயல் களுக்கும் புகார் செய்ய, 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று(ஆக.5) அறிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.05) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற கிருஷ்ணகிரி மாவட்ட BC&MBC நல அலுவலரை (04343-235655) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்
கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.