Krishnagiri

News January 16, 2025

குடுப்ப பிரச்சனையால் விஷம் குடித்து தற்கொலை

image

பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளியை சேரந்தவர் செல்வகுமார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் இவருடைய மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 16, 2025

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்:மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு

image

மல்லிநாயனப்பள்ளி அடுத்த எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன் மாற்றுத்திறனாளி. எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நடந்த பிரச்சனை தொடர்பாக வெங்கடேசன் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், வெங்கடேசன் எலுமிச்சங்கிரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தனது உடல் மீது டீசலை ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்னர்.

News January 14, 2025

மத்தூர் அருகே சாலைவிபத்தில் ஒருவர் பலி

image

மத்தூர் அருகே இருளர்வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (47). இவர் மோட்டார்சைக்கிளில் வேட்டியம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை அருள் என்பவர் ஓட்டி சென்றார். இவர் பின்னால் அமர்ந்து இருந்தார். அந்தநேரம் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .

News January 13, 2025

ஓசூருக்கு வருகை புரிந்த ஆளுநரை வரவேற்ற ஆட்சியர் 

image

ஓசூருக்கு 13.1.2025 இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 13, 2025

சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 20 காட்டு யானைகள்

image

ஒசூா் சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஒசூர், தருமபுரி மாநில நெடுஞ்சாலையும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையும் கடந்து செல்வது வழக்கம். 2 சாலைகளும் சானமாவு வனப்பகுதியிலிருந்து அமைந்துள்ளன. எனவே மாநில நெடுஞ்சாலை,தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒலி எழுப்பி நிதானமாக செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News January 13, 2025

குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவர்

image

ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலர்கள், கொலை குற்றவாளிகள் என 10 பேர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் ஒசூர் நீதிமன்றத்துக்கு குற்றவாளிகள் வருவதற்கு முன்பாக அங்குள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவித்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து ஒசூர் அருகே உள்ள இனப்பசத்திரம் கிராமத்தை சேர்ந்த சம்பத்குமார் (35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News January 13, 2025

பள்ளி இடைநிற்றலை தடுக்க 333 ஊராட்சி குழுக்களுக்கு பயிற்சி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளவயது திருமணம் மற்றும் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள் மற்றும் 333 ஊராட்சிளில் செயல்பட்டு வரும் கிராம, வட்டார அளவிலான குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் போக்சோ சட்டம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.

News January 12, 2025

கிருஷ்ணகிரி மக்களுக்கு அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜன.21ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஒகேனக்கல் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஓசூர் மாநகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாது எனக் கூறியுள்ளார்.

News January 12, 2025

கிருஷ்ணகிரியில் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் அன்றைய நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

ஓசூரில் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு

image

ஓசூரில் உள்ள தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கம் அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் தொழிலாளர்களுக்கு 2025 ஆண்டுக்கான காலண்டர் மற்றும் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!