India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.23) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. பட்டப்படிப்பு தகுதி உடையவர்கள் https://rb.gy/tns1hq என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இலவச பாடக்குறிப்புகள் பெற்றுப் பயன் பெறலாம் என கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி, கெடகானூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்குத்தி நீர் வீழ்ச்சியில், வற்றாத அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வற்றாத நீர் நிலையாக ஐந்து நீர் நிலைகள் இதில் உள்ளது. ஜவ்வாது மலையில் நிறைந்துள்ள மூலிகை செடிகளின் ஊடே வரும் அங்குத்தி அருவி நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணமாக ₹30 வசூலிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க மக்களே!
கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்ததாலும் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்ததாலும் மூலவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். ஒருவர் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் அவருடைய கோரிக்கைகள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை 21 நாட்கள் கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டோர் கலந்து கொள்ளலாம். தடகளம், கைப்பந்து, தேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். திறமையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்; சான்றிதழும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை <
நமது WAY2NEWS-ல் ரிப்போர்டராக சூப்பர் வாய்ப்பு. நீங்கள் ஆசிரியரா? வானவில் மன்ற கருத்தாளரா? ஊரக வளர்ச்சித் துறையில் ஒப்பந்த ஊழியரா? சுய உதவிக்குழு உறுப்பினரா? ஆம் என்றால் உங்கள் பணி குறித்த நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டு பண மழையில் நனையுங்கள். விருப்பமுள்ளவர்கள் <
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பங்களை, <
ஓசூரில் பதினோராம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஓட்டுநரை அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோவில் கைது செய்தனர். சிறுமி வயிற்று வலி காரணமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் பேரில் மகளிர் போலீசார் டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
▶ தளி ஏரி
▶ கிருஷ்ணகிரி கோட்டை
▶ அய்யூர் இயற்கை பூங்கா
▶ கெலவரப்பள்ளி அணை
▶ அவதானப்பட்டி ஏரி பூங்கா
▶ கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியம்
▶ கே.ஆர்.பி அணை
▶ கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா
▶ காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்
▶ ராயக்கோட்டா கோட்டை
▶ ராஜாஜி நினைவிடம்
▶ தளி வேணுகோபால சுவாமி கோவில்
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
Sorry, no posts matched your criteria.