India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் வன வாழ்வு மேம்பாடு பங்களிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கூறியதாவது, 3 தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு விருது வழங்கப்படும். விண்ணப்பங்கள் www.tnpcb.gov.in இல் பூர்த்தி செய்யவும், கடைசித் தேதியான ஏப்ரல் 15-ம் தேதியில் முன் சமர்ப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குந்தாரப்பள்ளியில் கூட்டோடு ஸ்ரீகுமரன் மஹாலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில், தவெக சார்பில் மத்திய மாவட்ட கழக செயலாளர் G.சுரேஷ் வருகை தந்து அறிமுகம் செய்து வைத்தார். இதில், மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் வயதானவர்களுக்கு உதவுவது போல நடித்து அவர்களது ஏ.டி.எம் அட்டையை திருடி நூதன முறையில் பணம் திருடி வந்த அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் 10ஆம் வகுப்பு, படித்துவிட்டு ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 84 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் சிவகுமார். இவர், தன், 5 வயது உறவுக்கார சிறுவன் பரத்துடன் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்றார். குப்பம் சாலையில் சென்ற போது எதிரில் வேகமாக வந்த லாரி மோதியதில் சிவகுமார் இறந்தார். படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மண்டல கடவுச் சீட்டு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (பிப்.14) முதல் 2 வாரங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு மாற்று நாள்களிலும் கடவுச் சீட்டு முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் https:///www.passportindia.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் மற்றும் வேளாங்கண்ணி குரூப் ஆப் ஸ்கூல் இணைந்து நடத்தும் தனியார் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 16, கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. சுமார் 14க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக ஆசிரியர்களை தேர்வு செய்ய இருப்பதால் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) லிங்கை <
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெரிகேபள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் வீரமணிக்கு திருச்சியில் நடந்த விழாவில் ‘ராஜ கலைஞன் விருதை’ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தங்க பதக்கத்துடன் விருது, சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற தலைமை ஆசிரியர் வீரமணிக்கு பள்ளி ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.