India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 11021 மும்பை தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஜன.7ஆம் தேதியன்று இரவு 21:30 மணிக்கு மும்பையில் புறப்பட்டு, SMVT பெங்களூரு, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும். ஓசூர் (ஜனவரி 8) மற்றும் தருமபுரி (ஜனவரி 9) நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஜன.5ஆம் தேதி நடைபெறுகிறது.17 வயது முதல் 25 வயது ஆண்களுக்கு 8 கி.மீ. பெண்களுக்கு 5 கி.மீ. தூர ஓட்டமும் நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.3,000 உள்ளிட்ட 7 பேருக்கு ரூ.1000 வீதம் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் 2000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இதற்காக நிலம் தேர்வு செய்யப்படும் பணிகளை அரசு செய்து வந்தது. இந்நிலையில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஓசூர் தாலுகாவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு உட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் பலர் குழுவாக சென்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஒசூா் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சோ்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தொடங்கி வைத்தார். மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து 62 கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயிலும் 9,340 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஒசூரில் ஆசிய எறிபந்து கழகம், தமிழ்நாடு எறிபந்து கழகம் இணைந்து ஆசிய அளவிலான தேசிய எறிபந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. இந்தியா,இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டிகளில் 21வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் 2 அணிகளில் இருந்து தலா 32 வீரா்,வீராங்கனைகள் பங்கேற்றனா். பெண்கள் அணியில் இந்தியாவும் ஆண்கள் அணியில் இலங்கையும் வென்றது.அவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கபட்டது. வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 3,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ 15,000 மதிப்புள்ள குட்கா அதனுடன் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், லாட்டரி, கஞ்சா, குட்கா விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் தி.மு.க., நகர நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளர் எஸ்.கே.நவாப் மற்றும் நகராட்சி தலைவர் பரிதா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நகர செயலாளர் நவாப் தி.மு.க.அரசின் சாதனைகள் குறித்தும், மற்றும் வருகிற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி நகரில் தி.மு.க., வுக்கு அதிக ஓட்டுகள் வாங்கித் தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரையில் தனியார் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்தவர்கள் தற்போது ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, விபத்தான இடத்தில் நேரில் பார்வையிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ அலுவலர்களின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். இதில் பேசிய ஆட்சியர், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மாவட்டத்தில் மகப்பேறு மரணங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.