India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக உணவில் தேரை, பல்லி, பாம்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ( அக்டோபர் 11 ) அன்று காலை 9 முதல் 4 மணி வரை 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே பொது மக்கள் அனைவரும் இம் மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
வேப்பனப்பள்ளி, பண்ணப்பள்ளியை சோ்ந்தவர் திம்மராஜின் மனைவி சிவசத்யா (25) இவா்களுக்கு 7 மாத குழந்தை உள்ள நிலையில், நேற்று தனது தந்தை முனிராஜியுடன் சென்றுள்ளார். அப்போது நாச்சிகுப்பம் பிரிவு சாலையைக் கடக்க முயன்றபோது, தனியார் பேருந்து மோதியதில் சிவசத்யா உயிரிழந்தார். குழந்தை முனிராஜிடம் இருந்ததால், நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: 1.சாலமரத்துப்பட்டி-சென்றாய மலை சமுதாயக்கூடம் 2.கெலமங்கலம்-இருதுகோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 3.தளி-மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 4.கிருஷ்ணகிரி-பச்சிக்கானபள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி 5.பர்கூர்- (பட்லபள்ளி, சிகரலப்பள்ளி) அரசினர் மேல்நிலைப்பள்ளி 6.சூளகிரி- (உள்ளட்டி, தியாகரசனப்பள்ளி) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஷேர்!
கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை டிப்ளமோ படிப்பு (2025-2026) ஆண்டு சேர்க்கை நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி தோட்டக்கலை துறை ஆராய்ச்சி பயிற்சி மையம் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ் 2 கணிதம் அறிவியல் தொழில்நுட்பக் குழு மாணவர்கள் விண்ணப்பிக்கவும். 31/10/2025 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். மாணவர்கள் என் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக். 09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://tnhorticulture tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பெங்களூரு செல்வதற்கான வழியில் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்துக்கு நாளை (அக்.10) வரவுள்ளார். இவரது வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் & கண் விழி பதிவை அப்டேட் செய்வது (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.