India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசை கண்டித்து இன்று பிப்ரவரி 08, அதிமுக சார்பில் எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி தலைமையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சூளகிரியை அடுத்த சப்படி என்ற இடத்தில், சென்ற பிப்.,2ஆம் தேதி பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த நபருக்கு, தலை முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்களை அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சூளகிரி போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குறு / சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து, இயற்கை மரண நிவாரண உதவித்தொகை, ஈமச்சடங்கிற்கான நிதியுதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் ஊராட்சிகளில் 12.02.2025, 13.02.2025, 18.02.2025 மற்றும் 19.02.2025 ஆகிய 4 நாட்கள் “மக்களுடன் முதல்வர்” திட்டம் 3ஆம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டரஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணுடன் மாந்தோப்பில் பேசிக் கொண்டிருந்த வாலிபரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை நாகரசம்பட்டி போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அவர், காவேரிப்பட்டினம் அடுத்த கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை பற்றியோ, அவரது பெயர், முகவரி, நிழற்படம், குடும்ப விபரங்கள், பள்ளி அக்கம்பக்கத்தார் அல்லது குழந்தையின் அடையாளத்தினை வெளிப்படுத்தக்கூடிய ஏதேனும் பிற விபரங்கள் ஊடகம் அல்லது சமூக வலைதளங்களில் வெளியிட்டால் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டப்பிரிவு 23 கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் இன்று உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களிலும் நாளை பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் வழங்குவதன் பொருட்டு மாதந்தோறும் நடைபெறும் வட்ட அளவிலான குறைத்தீர் முகாம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு முகாம் 8.2.2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் இருந்தனர்.
ராயக்கோட்டை அருகே கரிடிகுட்டை எனும் இடத்தில் இன்று காலை 3.30 மேல் ஓசூரில் இருந்து தருமபுரி நெடுஞ்சாலையில், பால் ஏற்றி வந்த 14 சக்கர கனரக வாகனங்கள் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீலகிரி சேர்ந்த ஓட்டுநர்கள் ராஜேஷ்குமார் மற்றும் அருண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.