India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேகதாது அணையை கட்ட மறுப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட அமைப்புக்கள் சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது.ஓசூர் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.
ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும் கத்தியால் குத்தி கொன்ற பின்னர் வீடுகளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். மூன்றும் புதன்கிழமைகளில் நிகழ்ந்ததால், போலீசார் இவர்களை ‘புதன்கிழமை கொலையாளிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் முடிந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வபோது பெய்து வரும் மழையால் வெயில் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல், ஈரோடு,தென்காசி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கிருஷ்ணகிரியில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் நாளை (மார்ச்.22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காம எடுத்துட்டு போங்க. ஷேர் பண்ணுங்க
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் நிலத்தகறாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய மூன்று பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரசாயன ஊசி செலுத்தப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் சோதனை மேற்கொண்ட உணவுத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சுமார் 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உள்புறம் சிவப்பாக இருப்பதற்காக ஊசி செலுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்ச்.21) <
கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டகுறுக்கி கிராமத்தில் நேற்று, திருப்பதிநாயுடு மனைவி நாகம்மாள்(75) என்பவரது ஓட்டு வீடு முழுவதும் தீப்பற்றியது. அதில் நாகம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். VAO முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.