India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரியில் உள்ள பாலக்கோடு வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஹள்ளி, மல்லுப்பட்டி, மஹேந்திரமங்கலம், சூளகிரி மதராசனப்பள்ளி, பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, ராயக்கோட்டை டவுன், ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், தேவனாம்பட்டி, கோபனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (பிப்.18) காலை 9 மணிக்கு மின்தடை ஏற்படும். SHARE IT
இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் கிருஷ்ணகிரியில் பெண்களுக்கான 30 நாட்கள் இலவச அழகு கலை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் நாளை(பிப்.18)ஆம் தேதிக்குள் இந்தியன் வங்கி அலுவகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரியில் 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 26 மாதங்களில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் 221 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. ஓசூரை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, பர்கூர் பள்ளியில், 13 வயது மாணவியை, கூட்டு பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு மட்டும் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரனிடம் மின் இணைப்பு வழங்க, ரூ.35,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, ரூ.5,000 ஐ வழங்கிய ராஜேந்திரன், மீதமுள்ள பணத்தை வழங்காமல் அவர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அளித்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய, ரூ.30,000 ஐ உதவி பொறியாளர் சிவகுரு, வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது, மறைவில் இருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று 16.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் இடுபடுகின்றனர். இதில் தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், மந்தகிரி, மகாராஜாகடை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணி பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை <
கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பாக வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி முதல் கேஆர்பி அணை பகுதியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் 30 நாட்கள் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி வழங்கப்பட உள்ளது ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர் மேலும் தொடர்புக்கு – 94422 47921 தொடர்பு கொள்ளவும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, பள்ளிக்கல்வித்துறையால் 2024-2025-ம் ஆண்டு மாநில அளவில் குடியரசு தின /பாரதியார் தின தேக்வாண்டோ மற்றும் குத்துசண்டை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெங்கல பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் நேற்று (15) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.