India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊத்தங்கரை உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்ற கல்லாவி புதூர் புங்கனை சென்னகேசவன், சிங்காரப்பேட்டை குப்பநத்தம் ஆறுமுகம், மத்தூர் அடுத்த பெருமனூர் பூபாலன், கிருஷ்ணமூர்த்தி, சாமல்பட்டி குன்னத்தூர் மணிமேகலை உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேறியை சேர்ந்தவர் காளியப்பன். அவரது மகள் திருமலா கீழ்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் மதிப்பெண் குறைந்ததால் கடந்த 12ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு கொண்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தமிழ்நாடு மின்சார வழங்கல் விதி தொகுப்பு, மின்சார பகிர்மான விதி தொகுப்பு 2004 தமிழ்நாடு மின்சார மின் பகிர்மான ஒழுங்கு முறை விதிகள் மற்றும் மின் நுகர்வோர் குறை தீர் மன்றம் மற்றும் மின்சார குறை தீர்ப்பாளர் ஒழுங்கு முறை விதிகள் அடிப்படையில் மின் நுகர்வோர் வழக்குகள் மன்றத்தின் முன் நேற்று விசாரணை செய்து பொறியாளர் செல்வகுமார் உறுப்பினர்கள் ஜாய், செந்தில்குமார் முன்னிலையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

பர்கூர் அருகே உள்ள செட்டிப்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். காரின் அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணின் உடல் 15 அடி தூரம் வரை இழுத்து சென்றதில் பாதி உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து காணப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து கந்திகுப்பம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர் முதுநிலை, முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-2025ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்செட்டி மரியாளம் அருகே சி.ராசிபுரத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் அரவிந்த் (19) இவருக்கு இதே பகுதியை ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கன்னியப்பன் தனது மகன் அரவிந்தனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த் கடந்த 16ஆம் தேதி அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் நேற்று உயிரிழந்தார்.

மத்தூரில் நேற்று தனியார் பேருந்து மத்தூர் திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலத்தை கடக்கும்போது அரியானாவிலிருந்து லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் எந்த ஒரு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த விபத்து நடந்த அதே இடத்தில் தினமும் ஒரு டூவீலர் அல்லது கார் ஏதாவது ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கிறது.

கிருஷ்ணகிரி மலை மேல் அமைந்துள்ள கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோயில் திருவிழாவை ஒட்டி நேற்று காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று காட்டு முனியப்பன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு முனியப்பனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மேலும் நாளை ஆடுகள் வெட்டி விருந்து அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்தமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (17.05.2024) நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர்கள் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 24 25 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணைய வழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.