India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 03.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ பர்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்த தாம். 24 தீர்த்தங்கரர்களை கொண்ட இக்கோயில் பத்மாவதி தேவியுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் வளாகம், கட்டிடக்கலை அழகு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இங்குள்ள அமைதியான சூழலில் நாம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் <
பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் ESI மருத்துவமனை எதிரில் லாரி ஒன்று இரண்டு மினி ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். லாரி ஓட்டி வந்த ஒட்டுனர் தப்பி ஓடியதால் விபத்து குறித்து முக்காண்டபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபத்தூர், ஆம்பூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் சாம்குமார் (19) மற்றும் அவருடன் 4 பேர் நேற்று போச்சம்பள்ளி அடுத்த செல்லக்குட்டப்பட்டி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்பு சந்தூர் கிராமத்திற்கு சென்ற போது, திருவயலூர் என்ற இடத்தில் கார் திரும்பியது அப்பொழுது எதிர்பாரவிதாமாக மின்கம்பம் மீது மோதி சாலையில் விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக 4 பேரும் உயிர்தப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2024-25இல் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் வரும் 6ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெறகிறது. அனைத்து பட்ட, பட்டய தொழிற்முறை படிப்புகள் மற்றும் அவை வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 10 வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற 24-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 8925941030, 8925940935 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். *10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்*
வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக் கொம்பு காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. எருது விடும் விழாக்களில், இந்த காளை பல பரிசுகளை வென்றுள்ளது. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இதன் ஆட்டம் வியப்பாக இருக்கும். ஒரு போட்டியில் ஒரு கொம்பை இழந்தாலும், இன்னொரு கொம்புடன் களத்துக்கு வந்து சீறிபாய்ந்ததை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இதன் மறைவால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வள கடத்தல் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், விதிமீறிய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 இடங்களில் அனுமதியின்றி கருப்பு கிரானைட் எடுப்பது கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி இயங்கிய 2 கிரஷர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதிரடி நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்களின் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கு விரைவில் இடம் ஒதுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவை தெரிவித்தார். உங்க ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.