Krishnagiri

News February 23, 2025

தளிப்பட்டி பகுதியில் இரண்டு சக்கர வாகன விபத்து; ஒருவர் பலி

image

வேலம்பட்டி பகுதியிலிருந்து காவேரிபட்டிணம் நோக்கி நேற்று பிப்ரவரி 22ஆம் தேதி காலை இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற குட்டூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அதிக வேகமாக சென்றதில் தளிப்பட்டி மேம்பாலம் பகுதியில் எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 22, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (பிப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. இதில் கிருஷ்ணகிரி காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் அவசர உதவி எண் 100 காவல்துறை சார்பாக வெளியிட்டனர்.

News February 22, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (பிப் 22) மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் அவர்கள் தலைமையில் ஒசூர் – தளி சாலை ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மார்ச் – 1 முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News February 22, 2025

டெல்டா நிறுவன செயல்பாடு, உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம்!

image

இன்று (பிப் 22) குருபரப்பள்ளி, டெல்டா நிறுவன கூட்டரங்கில், டெல்டா நிறுவனத்தின் செயல்பாடுகள், உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில்துறை செயலாளர் திரு.அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் மரூ செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 22, 2025

பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம்

image

இன்று (பிப் 22) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் (2ஆம் கட்டம்), ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் நிதியுதவி அளிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் திரு.எம்.பாலசுப்பிரமணியம் மற்றும் திரு.கே.சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

News February 22, 2025

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் அழைப்பு

image

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிப் 24 மற்றும் 25 இல் கிருஷ்ணகிரி ரவுண்டானா வாசவிக்கு அருகில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் .

News February 22, 2025

பாஜகவின் இந்தி திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

image

கிருஷ்ணகிரி அண்ணாசிலை எதிரில் நாளை (பிப் 23) காலை10.30 மணியளவில் பாஜக அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோ.திராவிட மணிகண்டன் தலைமை ஏற்க உள்ளார். மேலும் பேரா.பூசி.இளங்கோவன், பழ.வெங்கடாசலம் , மாவட்டச் செயலாளர் தி.கதிரவன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் வேலை

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<><> இந்த இணையத்தில்<<>> <<>>வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

தட்டச்சுப் பாடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தட்டச்சு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேதி 1-3-2025 மற்றும் 2-3-2025 ஆகிய தேதிகளாகும். ஜூனியர் கிரேடு தட்டச்சுப் பாடங்களுக்கான தேர்வுகள் ஐந்து பிரிவுகளாகவும், சீனியர் தர தட்டச்சுத் தேர்வுகள் நான்கு பிரிவுகளாகவும் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் மட்டுமே தேர்வர்கள் ஆஜராக வேண்டும்.

News February 22, 2025

மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்த மக்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த சாப்பர்த்தி பஞ்சாயத்து பந்தேரி செல்லும் சாலையில் உள்ள பழைய பாலத்தை சீரமைக்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான பத்திரிக்கை செய்தி கோரிக்கையை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தை சீரமைக்கும் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு ஊர்மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

error: Content is protected !!