Krishnagiri

News April 29, 2025

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு

image

ஒசூர் கோகுல்நகர் பகுதியில் வசித்து வருபவா் தனியாா் நிறுவன மேலாளர் வெங்கடேச பாபு. இவரது மனைவி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இவர் குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 48 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2025

கோர விபத்தில் ஓசூரை சேர்ந்த 5 பேர் பலி

image

ஓசூரை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். அப்போது பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருக்கும்போது முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

கிருஷ்ணகிரி வி.ஏ.ஓ. தூக்கிட்டுத் தற்கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டி கவுண்டன் உரை சேர்ந்தவர் பூங்காவனம் (52). வி.மாதேப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 14ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தனது வீட்டருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

10th பாஸ் போதும்: ரூ.15000 சம்பளம்

image

கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ அக்ஷ்யம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயத்துக்குட்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கிருஷ்ணகிரியில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News April 28, 2025

காட்டில் ஆடு மேய்க்க சென்ற பெண் மர்ம சாவு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மா (45). இவர் அங்குள்ள காட்டில் ஆடு மேய்க்க சென்றார். இந்நிலையில் மாலை வெகு நேரம் ஆகியும் பாப்பம்மாள் வீடு திரும்பாததால் காட்டிற்கு சென்று உறவினர்கள் தேடினர். அப்போது அங்கு பாப்பம்மாள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 28, 2025

காட்டில் ஆடு மேய்க்க சென்ற பெண் மர்ம சாவு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மா (45). இவர் அங்குள்ள காட்டில் ஆடு மேய்க்க சென்றார். இந்நிலையில் மாலை வெகு நேரம் ஆகியும் பாப்பம்மாள் வீடு திரும்பாததால் காட்டிற்கு சென்று உறவினர்கள் தேடினர். அப்போது அங்கு பாப்பம்மாள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 28, 2025

யானைகள் தாக்கி ஒருவர் மரணம்

image

அஞ்செட்டி அடுத்த ஜேசுராஜபுரத்தை சேர்ந்தவர் மதலைமுத்து (65). ஏப்ரல்.25 அன்று, ஆடு, மாடுகளை, மேய்ச்சலுக்காக சின்னமலை காப்புக்காட்டிற்கு ஓட்டி சென்றார். மாலையில், மதலைமுத்து வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நேற்று முன்தினம் காலை வனத்துக்குள் சென்று பார்த்தபோது, இவர் இறந்து கிடந்தார். வனத்துறை ஆய்வில் யானைகள் தாக்கி கொன்றது தெரிய வந்தது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 27, 2025

மே தினத்தையொட்டி மதுபான கடைகள் திறக்க தடை

image

மே 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL4A உரிமக் கடைகளில் மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை மற்றும் எடுத்துச் செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.

News April 27, 2025

கிருஷ்ணகிரியில் எந்த பதவியில் யார்?

image

▶கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்- சி.தினேஷ் குமார்( 9444162000)
▶காவல்துறை கண்காணிப்பாளர்- தங்கதுரை (9498168000)
▶மாவட்ட வருவாய் அலுவலர்- அ.சாதனைக்குறள் (04343231300)
▶சார் ஆட்சியர்- பிரியங்கா (9445000430), கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பதவியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!