India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 54- வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேப்பனஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, உருது பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காமன்தொட்டிக்குட்பட்ட மாற்று காட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி முன்னிலையில் தகவல் தொழில் நுட்பபிரிவு பிரசன்னா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.கே. அசோக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

பாகலூரை சேர்ந்தவர் மகேந்திரன். பூ கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களான நிலையில் குழந்தைகள் இல்லை. அதனால் மகேந்திரன் குடி பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். அதிலிருந்து மீள சர்ஜாபுரத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்துள்ளார். அங்கிருந்து வந்தவர் மீண்டும் குடிக்க ஆரம்பித்துள்ளார். அதை மனைவி கேட்டதால் கழுத்தை அவரை கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைானார் .

கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார். கடந்த 1-ந் தேதி ஊருக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் திருடு போயுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை உள்வட்டம் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியான மூன்றாம்பட்டி தளபதி நகரில் நேற்று (ஏப்ரல் 2) மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, நாடக கலைஞர்கள் மூலம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் வாக்கு சாவடி மைய எண் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவையில் பிரபாகரன் பெயர் ஒலிக்கும் என்று நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யாராணி செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் தான் பாஜகவில் இருந்தபோது ஆக்டிவாக இல்லை என்பதை உணர்ந்த சித்தப்பா சீமான், தனக்கு உறுதுணையாக இருப்பதாக கூறி இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். மாற்று அரசியல் உறுதுணையாக இருக்கும். மக்களவையில் ‘பிரபாகரன் குரல்’ ஒலிக்கும் என்று அதிரடியாக கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள இன்று செல்பி பாயிண்ட் அமைக்கபட்டுள்ளது.இதில் புகைப்படம் எடுத்து பரிசுகளை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., மற்றும் கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க்
ஆகியோர் இன்று புகைப்படம் எடுத்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100% ஓட்டு அளிக்க வேண்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று பயன்பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் கலந்து கொண்டு 100% வாக்களிக்கவும் என்ற தலைப்பில் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தி உறுதி மொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்வில் துணை ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.