India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பர்கூர் ஒன்றியம் பாகம் எண் 190ல் இருக்கும் வாக்காளர்களுக்கு வருகின்ற 19.04.24 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப்புகளை BLO அலுவலர் மருதுராஜன் நேற்று ராம்நகர் செவத்தான் கொட்டாய் தாடிகாரன் கொட்டாய் பள்ளகொள்ளை ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.

ஓசூர் அருகே சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்
வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குருபரப்பள்ளி கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் நேற்று ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிரப்பியுள்ளார்கள். நேற்று இரவு ஏடிஎம் வெல்டிங் இயந்திரத்தை மூலம் உடைத்து மர்ம நபா்கள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பொது மக்களின் தகவலின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 208 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

ராயக்கோட்டை போலீசார் கெலமங்கலம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வன்னியபுரம் தனியார் தொழிற்சாலை முன்பு சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் நல்லராலப்பள்ளியை சேர்ந்த ஜெயப்பா மகன் சங்கர்(38) என்பதும், அவர் கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஒசூர் சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் இன்று காலை தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு அவர் யார்? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளால், கடந்த தேர்தல்களில் சுவர் விளம்பரம், தெருக்களில் தோரணங்கள், ஆட்டோக்களில் ஸ்பீக்கர் வைத்து பிரச்சாரம், வேட்பாளர்களை ஆதரித்து விடிய விடிய தலைவர்கள் பிரச்சாரம் போன்றவைகளால் டீ கடை முதல் ஓட்டல்கள் வரை நல்ல வியாபாரம் போன்றவை இப்போது இல்லாததால் அனைத்து தரப்பினரும் பாதித்துள்ளனர். தேர்தல் திருவிழா இல்லாமையால் மக்கள் உற்சாகமின்றி உள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூரில் தீவிர வாகன சோதனையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (ஏப்ரல் 4) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.