Krishnagiri

News April 10, 2024

தெலுங்கு மொழியில் வாக்கு சேகரித்த நடிகை

image

ஒசூர் அடுத்த சூளகிரி பேரிகை ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து நடிகை விந்தியா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். சூளகிரி பேரிக்கை,  ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் தெலுங்கு மொழி பேசக்கூடியவர்கள் அதிகம் என்பதால், விந்தியா தெலுங்கு மொழியில் பேசியதால் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.

News April 10, 2024

அரசு பள்ளியில் நாகப்பாம்பு

image

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நாகப்பாம்பு தென்பட்டது. இதனை கண்ட மாணவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ரவி தலைமையிலான வீரர்கள் பள்ளியில் உள்ள நாகப்பாம்பை பிடித்து அருகே உள்ள காப்புக்காட்டில் விட்டனர். உடனடியாக பள்ளியில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 10, 2024

கிருஷ்ணகிரி: நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்

image

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இங்கு பேனாவையே கையில் பிடிக்க முடியவில்லை. டெல்லியில் டைனோசரைப் பிடிக்கிறாராம் என்று கிண்டலாகத் தெரிவித்தார். மேலும், ஆளும் திமுகவை விமர்சித்துப் பேசினார். நிகழ்ச்சியில் விந்தியாவை காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.

News April 10, 2024

டிராக்டர் ஓட்டி ஓட்டு கேட்ட கிருஷ்ணகிரி வேட்பாளர்

image

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் நேற்று (ஏப்ரல் 9) காலை கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார் தலைமையில் சவலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகளைக் கண்டு பூரிப்படைந்த வேட்பாளர், அவரும் விவசாயியாக மாறி டிராக்டரில் நிலங்களை உழுது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 9, 2024

கிருஷ்ணகிரி : வேட்பாளருக்கு மலர் தூவி வரவேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர்
திரு. வி. ஜெயபிரகாஷ் அவர்கள் இன்று (ஏப்ரல்.9) காவேரிப்பட்டினம் திம்மாபுரம் நெடுங்கல் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பகுதி அதிமுக கழகத் தொண்டர்கள் வேட்பாளருக்கு மலர் தூவி வாணவேடிக்கைகள் வைத்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

News April 9, 2024

கிருஷ்ணகிரியில் 500 கிராம் தங்கம், ரூ.30 லட்சம் பறிமுதல்

image

ஒசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த சொகுசு பஸ்ஸை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.30 லட்சம் 50 ஆயிரம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

News April 9, 2024

கிருஷ்ணகிரி: ரொக்கப்பணம் பறிமுதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி – சிகரலப்பள்ளி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை இட்டபோது உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 8, 2024

அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

image

ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர, பேரூர் கழக செயலாளர்கள் கிளை கழக பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

News April 8, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் மற்றும் டாக்டர் மூனீஸ் சாரிடபுள் சார்பாக சுமார் 2500 நபர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபேரணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு தலைமையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை நேற்று எடுத்துக்கொண்டனர்.

News April 7, 2024

அண்ணா நகர் பகுதியில் வீடு வீடாக பூத் சீட்டு வழங்கப்படுகிறது

image

பர்கூர் அடுத்த அண்ணா நகர் சாமியார் கொட்டாய் பகுதியில் இன்று ஏப்ரல் ஏழாம் தேதி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி வீடு வீடாக தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

error: Content is protected !!