India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி நேற்று (ஏப்ரல் 19) கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் சி.நரசிம்மன் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், நாடு முழுவதும் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். குறிப்பாக கிருஷ்ணகிரியில் பாஜக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிந்தங்கம்பள்ளி கிராமத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர் கூறும்போது பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றார்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் நடைபெற்று வருகிறது இதை ஒட்டி இன்று 19.04.2024 முதன்முறை வாக்களித்த இளம் வாக்காளர்கள், முதன்முறையாக வாக்களிப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்தல் பணிக்காக வந்த 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
வாக்குச்சாவடி மையங்களில் போதுமான கழிவறை, குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி வாக்கு சாவடியில் மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். அதனையொட்டி தாசில்தார் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி காவேரிப்பட்டினம் ஜின்னா சாலை 10வது வார்டு வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார். அவர் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை கட்டாயம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவையில் கிருஷ்ணகிரி தேமுதிக மாவட்ட செயலாளர் வக்கீல் முருகேசன் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தி ஐனநாயக கடமையை ஆற்றினார். இந்த வாக்கு சாவடியில் காலை 7 மணி முதலே ஆண்களும் பெண்களுமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை பகுதிகளிலுள்ள மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் இன்றும் மக்கள் கால்நடையாக சென்றுவருகின்றனர். இப்போது தேர்தல் நடப்பதால் பெட்டமுகிளாளம் ஊராட்சி கடமகுட்டை கிராமத்திலுள்ள வாக்கு சாவடிக்கு சாலை வசதி இல்லாததால் கழுதை மூலம் மின்னனு வாக்குப்பதிவு மிஷின்கள் அனுப்பிவைத்தனர். மற்ற பொருட்களை தலைசுமையாக கொண்டு சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பையம்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கை கணவர் நினேஷ் மற்றும் குடும்பத்துடன் பதிவு செய்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பையனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் வாக்கினை பதிவு செய்தார். அப்போது இந்த வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு வாக்கு மையத்திலும் ஆய்வு செய்துவருகிறார்.
Sorry, no posts matched your criteria.