India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL4A உரிமக் கடைகளில் மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை மற்றும் எடுத்துச் செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.
▶கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்- சி.தினேஷ் குமார்( 9444162000)
▶காவல்துறை கண்காணிப்பாளர்- தங்கதுரை (9498168000)
▶மாவட்ட வருவாய் அலுவலர்- அ.சாதனைக்குறள் (04343231300)
▶சார் ஆட்சியர்- பிரியங்கா (9445000430), கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பதவியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் குமார்(50)- கவிதா (47) தம்பதி. இவர்களது 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (23) ஆகியோர் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு தரப்பினர் என்றாலும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், போலீசார் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர்கள் மீது வழக்கு பதிந்த நிலையில், அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 28.04.2025 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளதால் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு 02.05.2025 அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி கவிதா. இவர்களின் 17வயதான மகளுக்கு திருமணம் நடந்த நிலையில், குழந்தை திருமண வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்ஜாமின் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தம்பதி திருப்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.