India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் தீர்த்தகுள காசி சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் இங்கு உள்ள சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி நடைபெறுவர்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு வாழ்க்கை வளமாகும். ஷேர் பண்ணுங்க
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி 10th ,12th தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் , விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 24குள் இந்த லிங்கை <
கிருஷ்ணகிரியில் புகப்பெற்ற சிவன் கோயில்களில் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள் பாலிக்கிறார்கள். மேலும் சூரியனின் பூஜைக்காக நந்தி மூலவரை காட்டிலும் சற்று விலகி இருக்கும் தலமாகும். ஷேர் பண்ணுங்க
பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில்<
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சிந்தகம்பள்ளி பக்கமுள்ளது எட்டிகுட்டை. இந்த ஊரில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. கடந்த 24ந் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரில் இருந்த 40 கிலோ காப்பர் வயர்களை திருடிச் சென்றனர். அதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.
அது குறித்து வரட்டனப்பள்ளி தாண்டவன்பள்ளம் மின் வாரிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணி கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார்
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது இந்த தளி தோட்டம். இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதமான வானிலை நிலவுகிறது. இது இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலையை ஒத்திருப்பதால் ‘சிறிய இங்கிலாந்து’ என்று பிரிட்டிஷார் பெயர் சூட்டினார். இந்த காலநிலை காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைவதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆண்டு முழுவதும் வருகிறார்கள். ஷேர் செய்யுங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, இவர் +1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது, கூலித்தொழிலாளியான வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வெங்கடேஷ், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்தார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் காவல்துறை போக்சோவில் வெங்கடேஷை கைது செய்தனர்.
மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.