Krishnagiri

News March 11, 2025

கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. போதுவாக அனுமன் கோயில்களிலும் வடைமாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுவார்கள். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது கஷ்டங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 11, 2025

வதந்தி பரப்பிய இந்து முன்னணி தலைவர் கைது

image

கிருஷ்ணகிரி – சேலம் சாலையில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ நவநீத வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலை இடிக்க போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வந்ததது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் கலை கோபியை போலீசார் இன்று(மார்ச்.11) கைது செய்துள்ளனர்.

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்.12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்துவிண்ணப்பியுங்கள்

News March 11, 2025

உரிகம் புளி விவசாயிகள் அறுவடையில் தீவிரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் , கோட்டையூர் மற்றும் தக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக புளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தனித்துவமான உரிகம் புளி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது விவசாயிகள் புளி அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News March 10, 2025

கிருஷ்ணகிரியில் கடும் வெப்ப அலை வீசும்

image

கிருஷ்ணகிரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 10, 2025

பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

image

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 10, 2025

மணமகனின் தந்தையின் உடல் முன்னிலையில் நடந்த திருமணம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகனின் தந்தை வரதராஜ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது ஆத்மா சாந்தி பெற வேண்டி, திட்டமிட்ட நாளிலேயே அவரது முன்னிலையில் மகன் மணிஷ், மணப்பெண் காவிய பிரியாவைத் திருமணம் செய்தார். இந்த உணர்வுப்பூர்வ நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

News March 10, 2025

பண்ணந்தூர் நில தகராறில் ஒருவர் பலி

image

பண்ணத்தூர் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளாக மூவரிடையே நில தகராறு இருந்த நிலையில் நேற்று மார்ச் 9ஆம் தேதி மாலை நிலத்திற்கு நீர் இறைக்கும் போது ஏற்பட்ட விவகாரத்தில் மாலை 7 மணி அளவில் ராமகிருஷ்ணன் மற்றும் திருமால் என்ற இருவர் கற்களை கொண்டு தாக்கியதில் சக்திவேல் என்பவர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். சக்திவேல் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

கிருஷ்ணகிரியில் அரசு வேலை

image

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நாளைக்குள் (மார்ச்.10) விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 9, 2025

பள்ளி மாணவியை 6 மாதம் பலாத்காரம் செய்த தொழிலாளி

image

மத்துார், ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (48).தொழிலாளியான இவர்13 வயது மாணவியை மிரட்டி, 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த, 2 நாட்களுக்கு முன் பள்ளியில், ‘குட், பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம் மாணவி, தன்னிடம் கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக, ‍தொழிலாளி சங்கர் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார்.சங்கர் தலைமறைவு.

error: Content is protected !!