Krishnagiri

News April 1, 2025

வெந்நீர் கொட்டி குழந்தை பலி

image

தி.மலையை சேர்த்தவர் பூபாலன்-அனிதா தம்பதியினர், இவர் பென்னாமடம் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 3½ வயதில் வேதாஸ்ரீ என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் அனிதா குழந்தையை குளிப்பாட்ட சுடு தண்ணியை இறக்கி வைத்துடுவிட்டு வீட்டிற்குள் சென்றதும் வேதாஸ்ரீ அதை கீழே தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த வேதாஸ்ரீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 31, 2025

கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 5 முக்கிய திருத்தலம்

image

கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 5 முக்கிய திருத்தலம். 1. சந்திர சூடேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீ பார்ஷ்வ பத்மாவதே சக்திபீடம் 3. ஹனுமான் தீர்த்தம் 3. காட்டுவேர ஆஞ்சநேயர் கோவில் 4. ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் 5. ஐராவதேஸ்வரர் திருக்கோயில். இதை தவிர்த்து வேறு கோயில்கள் உங்கள் பகுதியில் இருந்தால மறக்காம கமெண்ட் பண்ணிட்டு ஷேர் பண்ணுங்க

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <<-1>>ஷேர் பண்ணுங்க<<>>

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் பலி

image

மாரண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (37), இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை முனிரத்தினம், அவருடைய மூத்த மகன் சந்தோஷ் குமாருடன் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றனர். அங்கு எதிர்பாராத விதமாக இருவரும் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News March 31, 2025

பிறை தென்பட்டது : நாளை ரமலான் பண்டிகையை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மசூதி.

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ஊராட்சியில் நாளை ரம்ஜான் பண்டிகைக்காக மசூதி மிகவும் அழகாக அலங்கரிக்க பட்டுள்ளதை படத்தில் காணலாம். பிறை தென்பட்டதை அடுத்து நாளை மார்ச் 31 தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

News March 30, 2025

பெங்களூரில் மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து வரும் ஏப்ரல் 16க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News March 30, 2025

எழில் மிஞ்சம் கிருஷ்ணகிரி

image

கிருஷ்ணகிரி என்றதும் முதலில் நியாபகம் வருவது அய்யூர் சுற்று சூழல் பூங்கா தான் . இப்பூங்காவில் மூங்கில் குடில்கள், பாரம்பரிய குடில்கள், கண்காட்சி கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள் இப்பூங்காவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு வரும் சுற்றலா பயணியர் இங்கு உள்ள எழில் மிஞ்சும் இயற்க்கை அழகை கண்டு கழித்து ரசித்து செல்கின்றனர். ஷேர் பண்ணுங்கள்.

News March 30, 2025

ஆசிரியர் அடித்ததில் மாணவர் உடல்நிலை பாதிப்பு

image

மாத்தூரில் உள்ள தனியார் அரசு தனியார் பள்ளியில் உணவு இடைவேளை முடிந்து தாமதமாக வந்த 4 ஆம் வகுப்பு மாணவனை ஆனந்தி என்ற ஆசிரியர் குச்சியால் அடித்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற அம்மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்தது காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

error: Content is protected !!