India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.<
கிருஷ்ணகிரி மாவட்ட செப்-30 உங்களுடன் ஸ்டாலின் முகாம்
1) ஓசூர் அச்சட்டிபள்ளி ஊராட்சி-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
2) கெலமங்கலம் ஊராட்சி-அரசினர் உயர்நிலைப்பள்ளி,நாகமங்கலம்
3) கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி ஊராட்சி-அரசினர் மேல்நிலைப்பள்ளி கிட்டம்பட்டி
4) மத்தூர் வாலிப்பட்டி & எட்டிப்பட்டி ஊராட்சி-சமுதாய கூடம்,பெரமனூர்
5) காவேரிப்பட்டினம் பாரூர் & செல்லக்குட்டப்பட்டி ஊராட்சி-அரசினர் மேல்நிலைப்பள்ளி,பாரூர்
கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-2 மற்றும் 2ஏ-க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நேற்று (செப். 28) 31 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை 8,172 பேர் எழுதினர். மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்திற்கு நேரில் சென்று தேர்வு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தேர்வுக்கு 2,867 பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி வட்டத்தைச் சோ்ந்த 43 வயது நிறைந்த பெண்ணின் கைப்பேசிக்கு கடந்த 22-ஆம் தேதி போலி பி.எம். கிசான் செயலி வாட்ஸ் ஆப் மூலம் வந்தது. அந்த செயலியை அவா், பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடினா். திருட்டுபோனது குறித்து நேற்று (செ.28) கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077, 2. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993, 3. பேரிடர் கால உதவி -1077, 4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 5. விபத்து உதவி எண்-108, 6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100, 7. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, 8. விபத்து அவசர வாகன உதவி – 102. ஆபத்திற்கு உதவும் இந்த எண்களை உங்கள் போனில் சேமித்துக்கொண்டு, அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
கிருஷ்ணகிரி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2025&26ன் கீழ் மீன் வளர்ப்பு செய்திடும் விவசாயிகள் அதற்கான திட்டங்களில் பயன்பெற நாளைக்குள்(செப்.செப்.30) விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
காவேரிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் கார் மோதலில் பூவரசன் என்ற ராணுவ வீரர் நேற்று (செப்.28) உயிரிழந்துள்ளார். சப்பானிப்பட்டி கிராம பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதான அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் இன்று செப்-29 (திங்கள்) அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 17 வயது உட்பட்ட ஆண்கள் 8 கிமீ, பெண்கள் 5 கிமீ, 25 வயது உட்பட்ட ஆண்கள் 10 கிமீ, பெண்கள் 5 கிமீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.