India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற மே1 தொழிலாளர் தினத்தன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க மக்களே!
▶️அருள்மிகு மாரியம்மன் கோயில், அவதானப்பட்டி,
▶️ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில், கோட்டூர்,
▶️ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில், பாகிமனூர்,
▶️பிச்சுகவுண்டனஹள்ளி அம்மன் கோயில்,
▶️அருள்மிகு அங்காளம்மன் கோயில், காவேரிப்பட்டினம்,
▶️தீப்பஞ்சி அம்மன் கோயில், எட்டிப்பட்டி.
நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
ஒசூர் கோகுல்நகர் பகுதியில் வசித்து வருபவா் தனியாா் நிறுவன மேலாளர் வெங்கடேச பாபு. இவரது மனைவி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இவர் குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 48 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். அப்போது பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருக்கும்போது முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டி கவுண்டன் உரை சேர்ந்தவர் பூங்காவனம் (52). வி.மாதேப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 14ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தனது வீட்டருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ அக்ஷ்யம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயத்துக்குட்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு <
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மா (45). இவர் அங்குள்ள காட்டில் ஆடு மேய்க்க சென்றார். இந்நிலையில் மாலை வெகு நேரம் ஆகியும் பாப்பம்மாள் வீடு திரும்பாததால் காட்டிற்கு சென்று உறவினர்கள் தேடினர். அப்போது அங்கு பாப்பம்மாள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மா (45). இவர் அங்குள்ள காட்டில் ஆடு மேய்க்க சென்றார். இந்நிலையில் மாலை வெகு நேரம் ஆகியும் பாப்பம்மாள் வீடு திரும்பாததால் காட்டிற்கு சென்று உறவினர்கள் தேடினர். அப்போது அங்கு பாப்பம்மாள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்செட்டி அடுத்த ஜேசுராஜபுரத்தை சேர்ந்தவர் மதலைமுத்து (65). ஏப்ரல்.25 அன்று, ஆடு, மாடுகளை, மேய்ச்சலுக்காக சின்னமலை காப்புக்காட்டிற்கு ஓட்டி சென்றார். மாலையில், மதலைமுத்து வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நேற்று முன்தினம் காலை வனத்துக்குள் சென்று பார்த்தபோது, இவர் இறந்து கிடந்தார். வனத்துறை ஆய்வில் யானைகள் தாக்கி கொன்றது தெரிய வந்தது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.