Krishnagiri

News March 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News March 13, 2025

கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படை அமைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஒன்னல்வாடியில் நேற்று வீட்டில் இருந்த லூர்துசாமி(70), எலிசபெத்(63) ஆகிய முதியோரை மர்மநபர்கள் கழுத்தறுத்து கொலை செய்து வீட்டில் படுக்கைக்கு தீ வைத்து சென்றிருந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை நேரில் விசாரணை மேற்க்கொண்டு கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து  உத்தரவிட்டுள்ளார்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் <>வழங்கப்படும்<<>>. 15ஆம் தேதிகள் விண்ணப்பியுங்கள்.

News March 13, 2025

சாலையோரம் நின்றிருந்த தொழிலாளிக்கு கத்தி குத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தனியார் கல்லூரி எதிரில் சாலையோரம் நின்ற தொழிலாளி மீது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். அருகில் இருந்தவர்கள் காயம் பட்ட வரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குத்தி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய நபர்கள் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2025

பிறந்த 3-வது நாளில் பெண் குழந்தை திடீர் சாவு

image

சேலம் மாவட்டம் கீழ் சின்ன கவுண்டாபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது மனைவி சத்யாவுக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓசூரில் பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் சத்யா பெற்றோர் வீட்டில் இருந்தபோது, திடீரென குழந்தை உயிரிழந்தது. குழந்தை உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என பெற்றோர்கள் சந்தேக படுகின்றனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2025

டிவிஎஸஸில் பணிபுரிய அரிய வாய்ப்பு

image

ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட். கம்பெனியில் பணிபுரிய ஆண்கள், பெண்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் கம்பெனியில் நடைபெற உள்ளது. 10,+2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் தக்க கல்வி சான்றுகளுடன் நேரில் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

News March 12, 2025

குழந்தை வரம் அருளும் சந்திர சூடேஸ்வரர் கோயில்

image

சந்திர சூடேஸ்வரர் கோயில் ஓசூரில் உள்ள பாறை மலையின் மீது அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகும். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் குழந்தை வரம் வேண்டி இத்தலத்தில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 12, 2025

Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

image

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <>வேலை கிடைக்கும்.<<>>

News March 12, 2025

ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் தேர்த் திருவிழா விடுமுறை அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.இந்நிலையில் ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு (சார்-ஆட்சியர் அலுவலகம் உள்பட) வரும் மார்ச் 14-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 11, 2025

ஓசூரில் மார்ச்.14 உள்ளூர் விடுமுறை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மார்ச்.14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தோரொட்டம் மார்ச்.14 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகா, அரசு அலுவலகம், அரசு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது. மேலும் மார்ச்.14ல் அரசு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!