Krishnagiri

News April 3, 2025

லாரி மோதி பயங்கர விபத்து 

image

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் ESI மருத்துவமனை எதிரில் லாரி ஒன்று இரண்டு மினி ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். லாரி ஓட்டி வந்த ஒட்டுனர் தப்பி ஓடியதால் விபத்து குறித்து முக்காண்டபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 3, 2025

கார் மின்கம்பத்தில் மோதி விபத்து

image

திருபத்தூர், ஆம்பூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் சாம்குமார் (19) மற்றும் அவருடன் 4 பேர் நேற்று போச்சம்பள்ளி அடுத்த செல்லக்குட்டப்பட்டி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்பு சந்தூர் கிராமத்திற்கு சென்ற போது, திருவயலூர் என்ற இடத்தில் கார் திரும்பியது அப்பொழுது எதிர்பாரவிதாமாக மின்கம்பம் மீது மோதி சாலையில் விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக 4 பேரும் உயிர்தப்பினர்.

News April 2, 2025

உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2024-25இல் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் வரும் 6ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெறகிறது. அனைத்து பட்ட, பட்டய தொழிற்முறை படிப்புகள் மற்றும் அவை வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

கிருஷ்ணகிரி 108-ல் பணிபுரிய நேர்முகத் தேர்வு

image

கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 10 வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற 24-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 8925941030, 8925940935 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். *10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்*

News April 2, 2025

பிரபலமான காளை உயிரிழப்பு: ரசிகர்கள் சோகம்

image

வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக் கொம்பு காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. எருது விடும் விழாக்களில், இந்த காளை பல பரிசுகளை வென்றுள்ளது. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இதன் ஆட்டம் வியப்பாக இருக்கும். ஒரு போட்டியில் ஒரு கொம்பை இழந்தாலும், இன்னொரு கொம்புடன் களத்துக்கு வந்து சீறிபாய்ந்ததை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இதன் மறைவால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

News April 2, 2025

அதிரடி நடவடிக்கை பாயும்: கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரியில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வள கடத்தல் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், விதிமீறிய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 இடங்களில் அனுமதியின்றி கருப்பு கிரானைட் எடுப்பது கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி இயங்கிய 2 கிரஷர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதிரடி நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

கிருஷ்ணகிரியில் புதிய சுற்றுலா மாளிகை அமைச்சர் தகவல்

image

ஓசூரில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்களின் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கு விரைவில் இடம் ஒதுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவை தெரிவித்தார். உங்க ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்து

image

 மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (40) டைல்ஸ் தொழிலாளி, இவர் போச்சம்பள்ளியில் இருந்து கூச்சனூர் செல்லும் சாலையில், திருவாய் மாரியம்மன் கோவில் எதிரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் வினோத் குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிஸ்சார் உடைலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தது வருகின்றனர்.

error: Content is protected !!