India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30am சரக்கு வாகனம் (HR38AB2055) தமிழ்நாட்டிற்கு சரக்கு ஏற்றி வந்த நிலையில் சப்பாணிப்பட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள ஹோட்டலில் புகுந்தது. இதில் வாகனம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் கிளீனர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கிருஷ்ணகிரியிலிருந்து சேகரிக்கப்பட்ட பல வரலாற்று சின்னங்களை காணலாம். இங்கு கிருஷ்ணகிரியை பற்றி நீங்கள் அறியாத வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப். 1 ஆம் தேதி தொடங்கிய நீச்சல் பயிற்சியை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் தொடங்கிவைத்தாா்.12 நாள்கள் நடைபெறும் முதல்கட்ட முகாமில், சிறுவா், சிறுமிகள், பொதுமக்கள் என 18 போ் பயிற்சி பெறுகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.15 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வீரப்பா, 38, டைலர். இவர் நேற்று முன்தினம் மதியம் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றுள்ளார். மரக்கட்டா முனியப்பன் கோவில் அருகே, தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த சுசுகி சென் கார் மோதி பலியானார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தம்பதியரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation .nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 03.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ பர்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்த தாம். 24 தீர்த்தங்கரர்களை கொண்ட இக்கோயில் பத்மாவதி தேவியுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் வளாகம், கட்டிடக்கலை அழகு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இங்குள்ள அமைதியான சூழலில் நாம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் <
Sorry, no posts matched your criteria.