India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை 7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள பைரவர் சுவாமி ஆசிரமம் ஒரு ஆன்மீக மையமாக செயபட்டு வருகிறது. 2013இல் தொடங்கப்பட்ட இந்த நிலையம், பைரவ சுவாமி என்பவரால் தொடங்கப்பட்டது. இது, கடவுள் பக்தி, பூஜைகள், திருவிழாக்கள் போன்றவையை எடுத்துரைக்கிறது.இந்த நிலையம், கந்திக்குப்பம் அருகே அடர்ந்த காட்டில் ஸ்ரீ பைரவநாதர் கோயில் உள்ளது. மக்கள் பலரும் இந்த அசிரமத்திற்கு வருகை புரிகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட +2 தேர்ச்சி விபரம்: தேர்வு எழுதிய மாணவர்கள் – 8,732; தேர்ச்சி பெற்ற மாணவர்கள் – 7801; மாணவர்கள் சதவிகிதம் – 89.34%; தேர்வு எழுதிய மாணவிகள் – 10,142; தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 9,538; மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம் – 94.04%; தேர்வு எழுதிய 18,874 மாணவ, மாணவியர்களில் 17,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்தம் தேர்ச்சி விகிதம் 91.87 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் தேர்ச்சி 91.87% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 89.34 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 94.04% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபொடி என்ற இடத்தின் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று(மே 5), மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியை கடக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து தேன்கனிகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருண்கிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ஓசஹள்ளி, அஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த தம்பதி கனப்பள்ளி-கவிதா. இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடி, மின்னல் தாக்கி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி நேற்று(மே 5) நேரில் சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓம் ஸ்ரீகால பைரவர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி அத்திமரம் பாலாலய யாகம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரி சேகர் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி, குரியனப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷன் . இவர் போலந்து நாட்டில் உள்ள பல்கலைகழகத்தில் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே நாட்டை சேர்ந்த எவலினா மேத்ரோ (31) என்ற பெண்ணுடன் ரமேஷனுக்கு காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாச்சாரத்தின் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
போச்சம்பள்ளி நகர் அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (மே 5) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்படும் இந்த அரிய வாய்ப்பினை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.