India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் உயிரிழந்துள்ளார். இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவனையில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது தற்கொலைக்கு முயற்சித்து எலி மருந்து சாப்பிட்டார். இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 425 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1060 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் படி ஜனவரி மாதம் 69 பேரும், பிப்ரவரி மாதம் 62 பேரும், மார்ச் மாதம் 60 பேரும், ஜூன் 65 மற்றும் ஜூலை மாதம் 52 பேரும் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவர்கள் ஹெல்மட் அணியாமல் சென்றவர்கள் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அபார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த பிரபல வன கால்நடை மருத்துவரான பிரகாஷ்( 40 ) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் நெல்லையில் மகளுடன் வசிக்கும் தனது மனைவி கவிதாவிடம், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக போனில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட பிரகாஷ், தமிழக அரசு சார்பில் துணிச்சலான பணிக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பர்கூர் தனியார் பள்ளி பயிற்சி முகாமில், பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பது குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, எஸ்பி தங்கதுரை ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் அடுத்த நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகள் 25.8.2024 அன்று முடிவடைய உள்ளது. இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் கபடி, சிலம்பம், குத்துச்சண்டை, உள்ளிட்ட 23 வகையான விளையாட்டுகள் நடைபெறவுள்ளன.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாமில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் இன்று மாலை 7 மணியளவில் சமுக நலத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில் புகார் தெரிவிக்க சமுக நலத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பருகூர் அருகே தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிவராமன் மீது இரண்டு போக்சோ வழக்குகள் மாற்றும் ஒரு மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கில் ஆலோசனை மேற்கொண்ட சமூகநலத்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; முதல்வரின் உத்தரவு படி அமைக்கப்பட்ட குழுவின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ,மேலும், உளவியல் ரீதியாக மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும், இது போன்று இனி நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படும் என்று கூறினார்.
கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஐஜி மற்றும் சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில் தற்போதுஆலோசனை நடைபெற்று வருகிறது. இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் மாவட்ட எஸ்.பி தங்கதுரையுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், இளம்வயது திருமணம், குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் இலவச உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.