India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூர் – பெங்களூர் இடையே 23 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயிலை இயக்குவது குறித்து நேரடியாக அய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 கி.மீ தொலைவிலான பாதையில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் மெட்ரோ ரயில் நிறுவன குழு, கிருஷ்ணகிரி ஆட்சியர், ஓசூர் மாநகராட்சி ஆனையர் ஆலோசனை மேற்கொண்டனர். விரைவில் இதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்திய சிவராமன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இதனால், சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட பள்ளி கடந்த 18-ஆம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் 9 நாட்களுக்கு பிறகு, இன்று திறக்கப்பட்ட வகுப்புகள் தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய ஆக.25 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்.2 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் 13,808 மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுமை பெண் திட்டத்தின் கீழ் 7,538 மாணவிகள் பயனடைந்துள்ளாதாகவும், உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். மேலும், 6,270 மாணவர்கள் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சூளகிரி அருகே மளிகை கடைகளில் கர்நாடக மதுபானம் விற்பனை செய்வதாக பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் பேரிகை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்.தட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா (60) என்பவரும், தேர்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ்(32) என்பவரும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் 2023- 2024 நிதி ஆண்டில் ரூ.4,221 கோடி வசூலித்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் ரூ.269 கோடி வசூலித்து உள்ளது. இரண்டாவது இடத்தில் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் ரூ.257 கோடி வசூலித்து உள்ளது
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கோர விபத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் பேருந்துகள் என அடுத்தடுத்து 13 வாகனங்கள் மீது மோதியது. இதில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் பேருந்துகள் என அடுத்தடுத்து 13 வாகனங்கள் மீது மோதியது. இதில், 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரண்டபள்ளியில் நடந்த இந்த விபத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை சந்தைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார இணைப்பிற்கு கல்வித்துறை சார்பில் மின்கட்டணம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் மின்வாரிய அதிகாரிகள் மின்சார இணைப்பை துண்டித்து சென்றதால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில் இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 22ஆம் தேதி வரையிலும் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் சுமார் 1212 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.