India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். (SHARE பண்ணுங்க)
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் LKG- 8ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறும் RTE திட்டத்திற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், RTE திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால் 7 நாட்களுக்குள் அதை திருப்பி அளிக்க வேண்டும். திருப்பி அளிக்கவில்லை என்றால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (அ) 14417 தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனது தொண்டர்களை கட்டுப்பாடற்ற முறையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பற்ற தலைவராக தவெக தலைவர் விஜய் உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
மத்திய உள்துறையின் கீழ் உள்ள டில்லி போலீசில் 7565 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-25 வயதுக்குட்பட்டவர்கள் <
காந்தி ஜெயந்தியன்றுவிடுமுறை அளிக்காத 24 கடைகள், 22 உணவு நிறுவனங்கள் மற்றும் 5 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 51 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரியின் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் கூறியுள்ளார். தேசிய விடுமுறை தினத்தில், விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதிக்க வேண்டும்.
ஓசூரில் ₹9,000 கோடி மதிப்பில் ‘சாம்பியன்ஸ் பீச் வேலி’ என்ற உலகத் தரம் வாய்ந்த கடற்கரை ஸ்டைல் நகரம் உருவாக உள்ளது. 100 ஏக்கரில் கிரிஸ்டல் லாகூன் பாணியிலான வீடுகள், வில்லாக்கள், சேவை அடுக்குமாடிகள் அமையவுள்ளன. இதேசமயம் TIDCO அறிவுசார் பெருவழித்தடம், ₹60 கோடி வர்த்தக மையம், சர்வதேச விமான நிலையம் போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு, ஓசூர் முக்கிய தொழில்துறை-தொழில்நுட்ப மையமாக வளரும்.
ஓசூர் அடுத்த ஹெப்பகோடியில் உள்ள தனியார் ஜிம்மில் பயிற்சியாளராக இருந்த சந்திப், தினமும் உடற்பயிற்சிக்காக வந்த 20 வயது பெண்ணின் வாட்ஸாப் -ஐ ஹேக் செய்ததை அவரது சகோதரர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அவர்கள் உட்பட ஐந்து பேர் ஜிம்மிற்குள் சென்று கடந்த செ.23ஆம் தேதி சந்திப்பை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (அக். 02) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை& பகலூர் பகுதிகளில் புதிய விமானநிலையத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் ஓசூரில் நிலம் விலை 40% வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுஸ், ஹோட்டல்கள் & கமெர்ஷியல் இடங்களில் வளர்ச்சி அதிகமாகும். இதனால் EV, எலக்ட்ரானிக்ஸ் & குடியிருப்பு மேம்பாடு, ஒருங்கிணைந்த டவுன்ஷிப்கள் & தொழில்துறை கிளஸ்டர்கள் விரைவில் உருவாகும் மன நிபுணர்கள் கணிப்பு.
ஓசூர் மாநகராட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1025 கோடி மதிப்பில், மூன்று கட்டங்களில் செயல்படுத்தும் திட்ட கூட்டம் செப்-30 மாநகர கூட்டரங்கில் மேயர் தலைமையில் நடைபெற்றது. முதற்கட்டமாக மழை நீர் வடிகால், நீர்நிலைகள் மேம்பாடு & 3 பூங்காக்களுக்கு ரூ.125 கோடி, 2ம் கட்டத்தில் ரூ.707 கோடியில் 7 நீர்நிலைகள், 12 பூங்காக்கள், 3ம் கட்டத்தில் 193 கோடியில் 6 நீர்நிலைகள், 2 பூங்காக்கள் மேம்படுத்தபட உள்ளன.
Sorry, no posts matched your criteria.